Friday, February 17, 2017

புதுக் கவிஞன் ....!

பழம்பெரும் மொழியின்
புதுமுகம் அழகாய்
புன்னகை பூக்க
பதமாய் ஆரத்தழுவினேன்
அழகிய நடையினில்
இயல்புடன் இனிமையாய்
அமிழ்தெனும் தமிழினை
ஆர்வமாய் பழகினேன்
தாயின் தாலாட்டினில்

தவழ்ந்த சந்தமாய்
சிந்தையில் பதிந்ததை
சீருடன் செப்பினேன்
கற்றிடும் கலையினில்
காவியங்களின் ரசிகனாய்
ஆழ்கடல் மூழ்கி
கருக்களை தேடுகிறேன்
மரபெனும் படியினில்
புதுமையின் வழியாய்
புதுப்புது கவிதைகள்
அனுதினமும் படைக்கிறேன்
சங்கம் செய்கு
அப்துல் காதிரெனும்
வாவுப் பிள்ளையாய்
தமிழுலகில் தெரிகிறேன்

ராஜா வாவுபிள்ளை

No comments: