Friday, February 17, 2017

தூக்கத்திலும் எனை நுகர்ந்துப்பார்த்தவள்;..

தூக்கத்திலும் எனை
நுகர்ந்துப்பார்த்தவள்;
பசிக்காமலிருக்கும்போதும்
பாலூட்டியவள்;
வீல்ல்ல் என்று கத்தும்போது
பதறித் துடித்தவள்;
இன்றுவரை..
நான் கறுப்பு என்பதையே
சற்றும் ஒத்துக்கொள்ளாதவள்;
மாநிறம்டா என
மகுடம் சூட்டியவள்;
கறுப்பு தங்கமென்று
தமிழில் வர்ணனை செய்தவள்;
என் பிள்ளைப்போல
எவரென சவால்விட்டவள்;

நான் சண்டையிட்டாலும்
சமாதானத்திற்கு ஓடி வருபவள்;
முரைத்துக் கொண்டிருந்தாலும்
உணவுடன் வருபவள்;
வீராப்பாய் நின்றாலும்
வளைந்துக் கொடுப்பவள்;
இன்னும் ஒண்ணு என
அசராமல் தோசை ஊற்றுபவள்;
கொழுத்து நின்றாலும்
என்னை ஒல்லியாகவே பார்ப்பவள்!
#அம்மா...


Yasar Arafat

No comments: