Monday, February 6, 2017

மார்தட்டும் மானிடனே ....!

மார்தட்டும் மானிடனே ....!
இன்பம்வேண்டும் மானிடனே
----- இயற்கையை விலக்கியதேனோ
இல்லாமையை இல்லாதாக்கும்
----- இருப்பதையே தக்கவைத்தால்
அத்தனையும் அதனகத்தன்றோ
----- இயற்கைதரும் கழிவுகளும்
மண்ணில்கலந்து மக்கிஉரமாகி
----- பயிர்செழிக்க உதவிடுமே

செயற்கையின் மாயையில்
----- வேண்டியது விரைவாய்கிட்ட
வேண்டாதது எல்லாம்செய்து
----- மக்காத கழிவுகள்பெருக்கி
மண்ணையும் விண்ணையும்
----- தப்பாமல் மாசுபடுத்தி
தன்னிருப்பை தப்பிதமாக்கி
----- பகுத்தறியாமல் விடலாமோ
பாதகங்களை பவித்திரமென்றே
----- அவசரத்தில் அணுவைப்பிளந்து
கதிரியக்கம் கசிந்திடவிட்டு
----- பட்டப்பகலிலும் விளக்கேற்றி
பெருநோய்களை பரவவிட்டு
----- மார்தட்டும் மானிடனே
இறையோனை மறந்துவிட்ட
----- நின்னினைப்பு அறியாமையோ

-ராஜா வாவுபிள்ளை

No comments: