Saturday, March 18, 2017

உறவாடும் உறவுகள் ...
உயிரினங்கள்
பூமியோடு உறவாடுது ...
பயிரினங்கள்
வயலோடு உறவாடுது ...
உழைப்பு
வேர்வையோடு உறவாடுது ...
மரங்கள்
வேர்களோடு உறவாடுது ...
எண்ணங்கள்
மனசோடு உறவாடுது ...
வண்ணங்கள்
கலையோடு உறவாடுது ...
கற்கள்
மலையோடு உறவாடுது ...
சொற்கள்

குரலோடு உறவாடுது ....
வண்டுகள்
மலரோடு உறவாடுது ....
துண்டுகள்
தோளோடு உறவாடுது ....
குண்டுகள்
யுத்தத்தோடு உறவாடுது ...
உள்ளம்
அன்போடு உறவாடுது ....
வெள்ளம்
நிலத்தோடு உறவாடுது ....
கதைகள்
கற்பனையோடு உறவாடுது
சதைகள்
எலும்போடு உறவாடுது ...
விதைகள்
மண்ணோடு உறவாடுது ....
மேகங்கள்
விண்ணோடு உறவாடுது ....
பார்வைகள்
கண்ணோடு உறவாடுது ....
கல்வி
அறிவோடு உறவாடுது ....
கவிதைகள்
கவிஞர்களோடு உறவாடுது ....
நட்புகள்
முகநூலோடு உறவாடுது ....
கிராமம்
இயற்கையோடு உறவாடுது ...
நகரம்
செயற்கையோடு உறவாடுது ...
நரகம்
தீயவர்களோடு உறவாடுது ...
சுவர்க்கம்
நல்லவர்களோடு உறவாடுது ....

அப்துல் கபூர்

No comments: