Saturday, March 25, 2017

பிரியாது ....

தாயின்
உள்ளத்திலிருந்து
பாசம் பிரியாது ....
மலரின்
இதழ்களிலிருந்து
வாசம் பிரியாது ....
வனத்தின்
பரப்பிலிருந்து
மரங்கள் பிரியாது ....
வானத்தின்
உடலிலிருந்து
நீலம் பிரியாது ....
தாவரத்தின்
வேரிலிருந்து
நிலம் பிரியாது ...

சிற்பத்தின்
உருவத்திலிருந்து
கலைகள் பிரியாது ....
கடலின்
முகப்பிலிருந்து
அலைகள் பிரியாது ....
குடலின்
உறுப்பிலிருந்து
பசி பிரியாது ....
இயற்கையின்
முதுகுலிருந்து
பசுமை பிரியாது ...
தென்றலின்
தழுவலிலிருந்து
சுகங்கள் பிரியாது ....
ஓவியத்தின்
அழகிலிருந்து
வண்ணங்கள் பிரியாது ....
உள்ளத்தின்
கூட்டிலிருந்து
எண்ணங்கள் பிரியாது ....
கவிதையின்
வரிகளிலிருந்து
வர்ணனை பிரியாது ...
முகநூல்
தளத்திலிருந்து
பதிவுகள் பிரியாது ...
நல்லடியானின்
கடமைகளிலிருந்து
தொழுகை பிரியாது ....
இறைவனின்
குணங்களிலிருந்து
கருணை பிரியாது ....

அப்துல் கபூர்

No comments: