Tuesday, March 14, 2017

அரசியலில் நெருடலைத் தரும் ஒரு நிகழ்வு

சமீபத்திய அரசியலில்
நெருடலைத் தரும் ஒரு நிகழ்வு ...
செய்தியாளர்களிடம் பேசும்போது
காங்கிரசில் ராகுலைத் தவிர
வேறு யாரும் பேசுவதில்லை.
ஒரு சில நேரங்களைத் தவிர.
திமுகவில் ஸ்டாலினைத் தவிர
வேறு யாரும் பேசுவதில்லை .
ஒரு சில நேரங்களைத் தவிர.

காங்கிரசிலும் சரி
திமுகவிலும் சரி
அரசியல் தெரிந்தவர்கள்
மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இவர்கள்
ராகுலும் ஸ்டாலினும் பேசும்போது
அவர்களின் வாயையே பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில்தான்
இருக்கிறார்கள்.
மாற்றாக ...
பன்னீர் கட்சியில்
எல்லா முக்கிய பிரமுகர்களும் பேசுகிறார்கள்.
பாஜகவில் பேசுகிறார்கள்.
எல்லாமே தான்தான் என்ற எண்ணம் உள்ளவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் ...
அவர்களுக்கு நல்லது. !

Abu Haashima

No comments: