Saturday, May 27, 2017

ரமளானே வருக ....


விண்ணுலக தலைவனின்
இதயமது பொழிகிற
அருள்தனை சுமந்து
மண்ணுலகம் புறப்படும்
ரமளானே வருக ....
ஈமானிய மனங்கள்
புனிதமதை பருக

இபாதத்துகள் ததும்புகிற
மனிதமதை தருக ....
பகலையும் இரவையும்
நல்லமல்களால் போர்த்தி
நன்மைகளை பெருக்கிட
மனிதருக்குள் படிந்திருக்கும்
பாவங்களை உருக்கிட
எமக்குள் அமர்ந்திடுக ....
புனிதப் பசியின்
மகத்துவம் துலங்கிட
தீயவனாம் ஷைத்தானின்
எண்ணங்களுக்கு விலங்கிட
தூயவனாம் இறைவன்
தீர்மானிக்கும் கட்டளைகள்
நிறைவேறும் மாதமிது ....
பெருமை சேர்க்கிற
அருமை ரமளானே
தீனை அதிகரித்திட
தீதை கரித்திட
தூக்கம் மறந்திட
சஹரில் எழுந்திட
ஐவேளை தொழுதிட
திருமறை ஓதிட
மனிதரெம்மை பணித்திடுக ....
அகிலத்து இஸ்லாமியர்களே
நோன்புக்கு மட்டுமல்ல
வருடங்கள் முழுவதும்
ஷைத்தானின் நெஞ்சினில்
பாய்ச்சிடுவோம் தோட்டா .....
பாக்கியங்கள் நிரம்பிய
கரங்களை உயர்த்தி
ஒற்றுமை திரட்டி
ஷைத்தானை விரட்டி
சொல்லிடுவோம் டாட்டா ....
ரமளான் வாழ்த்துகள் ....

அப்துல் கபூர்

No comments: