Wednesday, June 21, 2017

நோன்பு_ஒரு_அகப்பார்வை

எளிய மக்களை எப்போதும் வயிறுதான் ஆள்கிறது. தலைதான் மனிதனின் எஜமான் எனினும் வயிற்றின் கட்டளைகள் அல்லது தேவைகளுக்குதான் அடிபணிய நேர்கிறது.
தன்னிறைவடைந்த வயிற்றுக்காரர்களைத்தான் இச்சை(ஹவா நஃப்ஸ்)ஆளமுயற்சிக்கிறது, ஈகோ எனும் தன்முனைப்பு ஆள முனைகிறது.
ஆனால் வயிறு தன்னிறைவடையாதபோதோ நான் எனும் அகந்தையும் ஆசைகளும் செயலற்று ஸ்தம்பித்து விடுகின்றன. ஆகவேதான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் திருமணம் செய்துகொள்ள வசதி இல்லாதவர்களை நோன்பு வைக்கப் பணித்தார்கள். ரமலான் என்றால் கருக்குதல் என்று பெயர். பாவங்களைக் கருக்குதல் என்று பொருட் கொண்டாலும் எல்லாப் பாவங்களுக்கும் காரணமாக உள்ள ஈகோவையும் இச்சைகளையும் அடக்கிவைக்கும் பயிற்சியாகவே நோன்பு இருக்கிறது

நிஷா மன்சூர்

No comments: