Saturday, August 12, 2017

தேடல்கள் ....!

ஞானத்தின் தேடலில்
இயற்கையில் ஒன்றினேன்
இருப்பதும் இல்லாததும்
ஒன்றென கண்டேன்.

பொருளின் தேடலில்
உலகில் உழன்றேன்
உயர்வும் தாழ்வும்
உண்டென கண்டேன்.



மனிதத்தின் தேடலில்
குறைநிறைகளை ஆராய்ந்தேன்
தன்குறை உணர்ந்து
பிறர் நிறை காண்பதில்
நிறைந்திருக்கக் கண்டேன்.

அமைதியின் தேடலில்
ஆழ்மனதில் தியானித்தேன்
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்திருக்கக் கண்டேன்

நட்பின் தேடலில்
நம்பிக்கை கொண்டுசென்றேன்
நாலும் தெரிந்தவர்கள்
நிறைந்திருக்கக் கண்டேன்

அறிவின் தேடலில்
அனைத்தையுமறிய முயன்றேன்
கற்றது கையளவேவென
நிதர்சனத்தில் கண்டேன்

வெற்றியின் தேடலில்
வெறிகொண்டு திரிந்தேன்
வீண்விரயம் தவிர்த்தாலே
வெற்றிக்குவழியென கண்டேன்.

அமைதியின் தேடலில்
ஆர்ப்பரித்து அலைந்தேன்
எங்கும் காணாமல்  முடிவில்
என்னுள்ளேயே கண்டேன்.

அழகின் தேடலில்
ஆசைகொண்டு அலைந்தேன்
இல்லாள் பணிவிடையில்
பேரழகை கண்டேன்

ராஜா வாவுபிள்ளை

No comments: