Saturday, August 19, 2017

தடவல் இல்லையேல் வாழ்க்கை இல்லை

கழிந்த வாரம் என்னுடன் வேலை செய்யும் COMPANY நண்பர் பக்கத்தில் எனக்குதெரிந்த ஒரு நண்பர் இருக்குறார் வா பார்த்து விட்டு வரலாம் என்று கூப்பிட்டார் சரிபோகலாம்
என்று உடன் சென்றேன்.
DOUBLE BEDROOM FLAT,HALL லில் ஒருவர் அமர்ந்திருந்தார் பஞ்சாபிகாரர் T Vயில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது அவர் கையில் ஒரு ANDROID PHONE அவரை GREET செய்துவிட்டு முதல் அறையில் நுழைந்தோம்
அங்கே இருவர் MAHARASHTRA காரர் அங்கும் T V யில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது
அந்த இருவர் கையிலும் ANDROID PHONE.
நாங்கள் தேடிப்போன ஆள் அங்கில்லை என்பதை இரண்டாவது அறையிலுள்ள ஒரு மளயாழிமுலம் தெரிந்துகொண்டோம் அங்கும் T V யில் ஹிந்திபடம் ஓடிக்கொண்டிருந்தது அவரின் கையிலும் ANDROID PHONE.
நாங்கள் தேடிச்சென்றது ஒரு மதுரைக்காரர் அவரில்லையென்பதை அறிந்து கொண்டு என்நண்பரும் ANDROID எடுத்து தொல்லைகொடுத்தார் சற்று இருங்கள் 10 நிமிடங்களில் வந்து விடுகிறேனென்றார்.அமர்ந்தோம்.
இதில் கொடுமை என்னவென்றால் நாங்கள் இருவர் சென்றதில் எங்களிடம் நால்வரும் சரியாக பேசாவிட்டாலும் பரவாயில்லை பொருத்துக்கொள்வோம்.3 T V யை வைத்து நான்கு பேர் படம் ஓட்டிக்கொண்டிருந்தார்கள் பார்க்கவில்லை நால்வரும் ANDROID லயே மூழ்கி கிடந்தார்கள்.
ANDROID லே தடவுவதற்க்கு எதற்கு T V அதிலே எதற்கு படம் மேற்கொண்டு எதற்கு மின்சார வீண்விரயம்? LIGHT ஆப் செய்துவிட்டு நால்வரும் ஆளுக்கொரு மூலையிலிருந்து நல்ல தடவலாமே? இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.?
தடவல் இன்று அத்தியாவசியம்தான் அதற்கு ஒரு கணக்கில்லையா? நம்ம காலத்திலேயே கண்மண் தெரியாமல் தடவுகிறார்களே இனி வரும் காலங்களில் தடவலின் நிலைமை எப்படி இருக்கும்.இறைவன் தான் நம்மெல்லோரையும் தடவலிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
ஜஸாக்கல்லாஹ்


Noor ul huda

No comments: