Thursday, August 31, 2017

நிலைத்திடும் புது வாழ்வு ....!

நிலைத்திடும் புது வாழ்வு ....!
விடியலில் விளைந்த
இளமை நிலைக்குமென
காலமெல்லாம் களித்திருந்து
வாலிபம் வந்ததும்
கற்றுத்தேர்ந்த வித்தையை
உழைப்பில் முறுக்கேற்றி
அறிவால் மெருகேற்றி
வியர்வையால் சுத்தப்படுத்தி
வாழ்வை மேம்படுத்தி
வளர்ந்து முதிர்ந்ததும்

கையில்கிட்டிய வெற்றிக்கனியை
மெல்ல சுவைக்க
மகிழ்வுடன் முனைந்திட
சடுதியில்
காலமும் கனிந்திடுதே
பயணிக்கும் நீள்பாதையில்
நினையாமலே வரும்
பயணத்தின் கரைகண்டு
கண்காணா மறுவுலகில்
உதித்திடுமே புதுவாழ்க்கை
நிலைத்திடுமே.

ராஜா வாவுபிள்ளை

No comments: