Thursday, August 10, 2017

விளக்கை ஏற்று

உள்ளே நுழைந்து விடுகிறது
உனது அன்பின் ஒளி.
கொட்டும் குளவியாய்
கண்ணாடி ஜன்னலில்
முட்டித் தவிப்பதெல்லாம்
அந்த வெறுப்பு தான்.


யாருக்காகவோ
எடுத்துவைத்த அமிலத்தால்
பொத்தலாகிப் போவதோ
உனது 'பாத்திரம்'தான்.

துளித்துளியாய்ச் சொட்டும்
ஞாபகங்களில்
நேற்றின் பெருமழை.

நாளைய விடியல்களில்
நேசத்தின் சுகந்தமே
நிரம்பட்டும்
இந்த இருட்டறையில்
விளக்கை ஏற்று இப்போதே

No comments: