Sunday, September 3, 2017

கண்திறந்த போதிலும்

கண்திறந்த போதிலும் 
காட்சியற்றுப் போகலாம்
பொன்னிறைத்த வீட்டிலும் 
புன்னகைக்க மறக்கலாம்

விண்ணொளிரும் மீன்களும் 
விழுந்தெரிந்தே போகலாம்
அன்பிருக்கும் வாழ்வுதனில் 
இன்பமின்றிப் போகுமா


தரமில்லாத நாவினால் 
தகரும் உறவுப் பாலமே
அறமில்லாத அறிவினால் 
அழியும் உலகம் யாவுமே

ஒருவர் உயிரில் ஒருவராய் 
இருவர் வாழ வேண்டுமா
அறிவைத் தூர நிறுத்து - உயர் 
அன்பை உயிரில் பொருத்து


அன்புடன் புகாரிஅன்புடன் புகாரி

No comments: