Tuesday, October 31, 2017

எழுது

எழுது
எழுத்து ஒரு தவம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு யுகம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு வானம்
நீ எழுது

மௌனம்

மௌனம்
சிறந்த மொழி


மௌனம்
பேரறிவின் அடையாளம்


மௌனம்
உயிரின் காப்பகம்


மௌனம்
உணர்வுகளின் நங்கூரம்


மௌனம்
மன்னிப்பின் ஆலயம்


மௌனம்
வானத்தின் நீலம்


மௌனம்
கடலின் ஆழம்


மௌனம்
கருந்துளையின் ரகசியம்


Monday, October 30, 2017

மனிதர்களின் காலமிது ....!*

அலங்கார சிலுவையை
ஆசையாய் சுமக்கும்
மனிதர்களின் காலமிது
அன்றாட அலுவல்களில்
காற்றாய் கரைந்துபோகும்
மனிதர்களின் காலமிது
அவ்வப்போதும் கூட
உறவுகளை நினைக்காத
மனிதர்களின் காலமிது
பணம் தின்று
உயிர் வாழும்
மனிதர்களின் காலமிது

நிலையற்ற வாழிவின் நிறைவு ....!*

காலையில் கண்விழித்தால்
மட்டுமே தெரியும்
உடலின் உயிர் பிடிப்பு
முழுப்பகலும் உழைத்தால்
மட்டுமே தெரியும்
முன்னேற்றத்தின் முதல் படி
சம்பாத்தியத்தில் சேமித்தால்
மட்டுமே தெரியும்

Sunday, October 29, 2017

புகைத்தலும் செரிமான மண்டல நோய்களும்

Shahjahan R

புகைத்தலும் செரிமான மண்டல நோய்களும்

இதைப்பற்றி விளக்குவதானால் உடலின் சில அங்கங்கள் குறித்து விளக்க வேண்டும். அதாவது, வாய், குரல்வளை, உணவுக்குழல், மூச்சுக்குழல், சிறுகுடல், பெருங்குடல், செரிமான அமைப்பு மற்றும் இதர உறுப்புகள் அடங்கிய உணவு மண்டலம் குறித்துப் பார்க்க வேண்டும். படத்தையும் அதில் உள்ள பாகங்களையும் பாருங்கள். (ஏதோவொரு காலத்தில் பள்ளியில் படித்தது நினைவு வரக்கூடும்.) இதைப் படிக்கும் மருத்துவர்கள் தமது கருத்துகளை வழங்கினால் மகிழ்வேன்.
நாம் உணவை உட்கொள்கிறோம். வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் எச்சிலைச் சுரக்கின்றன. அதனுடன் சேர்த்து உணவை மென்று விழுங்குகிறோம். உணவை உள்ளே தள்ளுகிறது நாக்கு. உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் விடாமல், உணவுக் குழலுக்குள் போக வேண்டும். (அதேபோல, மூச்சுக் குழாய்க்குள் போக வேண்டியது உணவுக் குழாய்க்குள் போகக்கூடாது.) இந்த வேலையை குரல்வளைக்கு (larynx) அருகே உள்ள குரல்வளை மூடி (epiglottis) கவனித்துக் கொள்கிறது. (குரல்வளைதான் நம் குரல் - ஒலி உருவாக்குவதற்கும் பொறுப்பு.) எலாஸ்டிக் போல செயல்படும் இந்த குரல்வளை மூடி, நாம் மூச்சு வாங்கும்போது நிமிர்ந்து, உணவுக் குழாயை மூடிவிட்டு, காற்றை மூச்சுக்குழாய்க்கு அனுப்புகிறது. உணவு உண்ணும்போது, வளைந்து மடங்கி மூச்சுக்குழாய்ப் பாதையை மூடிவிட்டு உணவுக்குழாய்க்கு அனுப்புகிறது.

நிலையற்ற மனிதன் ....!*


தான் என்றென்றும்
பெருமையின் சிகரத்தில் அமர்ந்து
களைப்பேதும் எய்திடாமல்
அங்ஙனமே இருக்கப்போவதாக
எண்ணுபவர்கள் மற்றுள்ளோரை
சகமனிதரென்றும் பாராமல்
சிறுமையின் ஆழத்தில் ஆழ்த்தி
மனவழுத்தத்தின் உச்சத்திலேற்றி

தலைமுறைகளும் படிப்பினையும்.

மனிதனுக்கு வேண்டிய வாழ்வியல்கள் வழிகள் அத்தனையும் அழகியமுறையில் மார்க்கத்தில் போதிக்கப் பட்டிருக்கிறது என்பது நாம் யாவரும் அறிந்ததே. அறிந்துகொண்ட போதனைகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எவ்வாறு நம் வாழ்வில் செயல்படுத்துகிறோம் என்பதை ஒரு உதாரணத்தைக்கொண்டு பார்க்கலாம்.
அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
இளவயதில் நமக்கு மார்க்க கல்வியை போதித்த நம் பெரியோர்கள் சொல்லித் தந்தவைகளில் ஒன்றாவது:
'அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு தலைமுறையினரை அறிந்திருக்க வேண்டும்'.

Wednesday, October 25, 2017

அத்தனையும் அனுபவமாய் ...

Haja Maideen

தோல்வியா ? அப்படின்னா என்னா ?

by Abu Haashima

எதிர்பாராத தோல்விகளால் அவன்
துவண்டு போனான்.
அழகாக நடந்த வியாபாரம் நஷ்டமடைந்தது. வாழ்க்கையின் உச்சத்திலிருந்தவன் பறவைகளின் எச்சத்தைபோல்
கீழே விழுந்தான்.
கீழே விழுந்தவனை யாரும் கைதூக்கி விடவில்லை.
அவர்களும் தங்கள் பங்குக்கு காலால் தேய்த்துக் கொண்டே சென்றார்கள்.
அவனை நம்பி கடன் கொடுத்தவர்கள் அவன் மானத்தை அவிழ்த்து அம்மணமாக்கினார்கள்.
கொலை செய்து விடுவதாய்
மிரட்டினார்கள்.
போலீசில் புகார் செய்தான்.
அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
தினம் தினம் அவமானப்பட்டு
அச்சப்பட்டு
அவனால் வாழ முடியவில்லை.

Tuesday, October 24, 2017

பேசாத படத்தின் குழந்தை பேசுகிறது ....

அப்துல் கபூர் 

பாசத் தொட்டிலில்
எனை தாலாட்டி
உணர்வு மேலோங்க
உள்ளம் பூரிக்க
உணவு ஊட்டுகிற
அருமைத் தாயே
கண்கள் கலங்காதே ....
சுற்றுச் சூழலில்
மாசு படர்ந்த
காற்றை சுவாசிக்கிற
தூசு படர்ந்த
சோக வாழ்க்கையில்
எனை வாழ வைத்திட
காசு தேடி
போராடும் தாயே
கண்கள் கலங்காதே ....

" பர்தாவை நீக்கு--உன்னை பார்க்கணும்.......!"

கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். அற்புதமான மனித நேயர்.
தமிழகத்தில் எங்கள் காலத்தில் வாழ்ந்திருந்த கவிஞர்களில் செல்வ வளம் கனிந்திருந்த கவிஞர்.
மயிலாடுதுறையில் காதீஜா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஹோல்சேல் கடை. சற்றுத் தள்ளியிருந்த கூறைநாடிலும் ஒரு கடையிருந்தது.
வளமிக்க கவிஞர். வளமான கவிஞர்.
இந்த மண்மீது இப்போது வாழும் வாய்பை இழந்திருப்பவர்.
அநேகமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இறைநாட்டப்படி அவனளவில் சென்றுவிட்டவர்.
கவிஞர் தா.காசிமுக்கும் எனக்கும் மச்சான் நாகூர் கவிஞர் ஜபருல்லாஹுக்கும் நெருங்கி நண்பர்.
தா.காசிம்தான் எனக்குக் கவிஞர் ஸலாமை அறிமுகம் செய்து வைத்தார்.
கவிஞர் ஸலாம் கவிதைகள் மிக வித்தியாசமான பாணிக்குரியன. பிறரிடமிருந்து வேறுபட்டு தனியே தன்னை முன்னிறுத்தும் வீரியம் நிலைத்தவை.
" இறைவனிடம் கையேந்துங்கள் --அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை.!
இது அவரது கவிதைப் பாணி.
இசைப் பாடல்கள்தாம் அவர் ஆக்கித் தந்த ஆக்கங்கள்.

Monday, October 23, 2017

இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

அப்துல்கையூம்
மாற்றுமத நண்பரொருவர் என்னிடம் முன்பொருமுறை ஒரு கேள்வி கேட்டிருந்தார். ‘வட்டி என்பது நம் அன்றாட வாழ்க்கையில், பொருளாதார கொடுக்கல் - வாங்கலில் நிரந்தர அங்கமாக ஆகி விட்டதொன்று. அதை ஒரு பஞ்சமாபாதகம் போன்று ஏன் உங்கள் மதம் சித்தரித்துக் காட்ட வேண்டும்?’ என்றார்.
அதற்கு நான் சொன்ன பதில் “வட்டி என்பது மேலோட்டமாக பார்ப்பதற்கு மிகச்சாதாரண ஒரு விஷயமாக நமக்குத் தோன்றுகிறது. அநியாயமான முறையில் வாங்குகின்ற வட்டியானது சமூகத்தின் சீர்கேடு. சமுதாயத்தில் பயங்கர பின்விளைவுகளையும். ஏழை எளியவர்களின் வாழ்வை சீரழிக்கக்கூடியதாக இருக்கின்றது” என்றேன். எனது பதில் அவரை திருப்திபடுத்தியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்ததற்கு காரணங்களில் ஒன்று, பொருளாதார ரீதியில் யூதர்கள் அநியாய வட்டி வாங்கி நாட்டின் நிலைமையை சீர்குலைத்தார்கள் என்பது அவனது சித்தாந்தந்தில் ஒன்று

தலைமைத்துவம் எனும் முள் கிரீடம்!

by Basheer Ahmed usmani
தலைமைத்துவம் எனும் முள் கிரீடம்!


ஆசையில்லாத மனிதர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஓர் ஆசை இருக்கிறது.

அந்த ஆசைகளைப் பொறுத்து அதை அடையும் வழிகளும் அதை நோக்கிய பயணமும் வேறுபடும்.

உலகில் ஆசைப்பட்ட எல்லோரும் அதை பெற்றுக் கொண்டதாகவோ, ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்து கொண்டதாகவோ வரலாறு கிடையாது.

ஆனாலும், பணக்காரன், ஏழை, படித்தவன், பாமரன் முதலாளி, தொழிலாளி என எல்லோருக்கும் பொதுவான ஓர் ஆசை இருக்குமானால் அது தலைமைத்துவம் எனும் பதவியின் மீதான ஆசைதான்.

எனவே தான் ஆசைகளை நோக்கிய பயணத்தை தொடர்கிற ஓர் இறைநம்பிக்கையாளனை அழைத்து இஸ்லாம் பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறது.

قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَى سَبِيلًا

நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக! ஒவ்வொருவரும் தத்தமது வழிமுறைப்படி (ஆசைப்படி) செயல்படுகின்றனர்.”

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ

அல்லாஹ் கூறுகின்றான்:  “அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் ஆசை கொள்ள வேண்டாம்.”

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ

“ஒவ்வொருவரும் ஒரு திசையை (ஆசையை) நோக்கி பயணிக்கின்றனர். நீங்கள் நன்மையான ஆசையை நோக்கி பயணிப்பதில் ஒவ்வொருவரும் முன்னேறிச் செல்லுங்கள்.”


 (اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ, وَاسْتَعِنْ بِاَللَّهِ, وَلَا تَعْجَزْ) قَالَ رَسُولُ اَللَّهِ صلى الله عليه

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:  “உமக்கு பயன் தருகிற அத்தனைக்கும் நீ ஆசைப்படு! அதை அடைந்து கொள்ள அல்லாஹ்விடம் உதவி கேள்! அதனை அடையும் வழிகளில் சோர்வடைந்து விட வேண்டாம்.”

Sunday, October 22, 2017

ஒருத்தர்கிட்ட ...

ஒருத்தர்கிட்ட
எவ்வளவு தான் பணம் இருக்கட்டும்..அன்பும்,
அரவணைப்பும்,ஆறுதலும் இல்லையென்றால் அந்த பணத்தினால் எந்த பலனுமில்லை..
ஒருத்தர் இளவயதாக
இருக்கும் போது குடி கொண்டிருக்கும் அதிகாரம்,கெத்து நாள் போகப் போக படிப்படியாக குறைந்து போகிறது...
இதற்கு காரணம் உடம்பில் ஏற்படும் இயற்கை
மாற்றங்கள் தான்..
வயசு போகப்போக உடம்பில் ஒரு சின்ன பலகீனம்
வந்தாலும் மனசும் தளர்ந்து போகிறது.உடம்பும் தளர்ந்து போகிறது..
நம்மோடு இருக்கும் அதிகாரம்,ஈகோ எல்லாமே காணமல் போய்விடுகிறது..
இப்படியான நேரங்களில் உடனிருப்பவர்களின் ஒரு ஆறுதலான வார்த்தை தேவைப்படுகிறது..
அந்த ஆறுதல் அரவணைப்பு கிடைக்காத போது மனம் விரக்தி அடைகிறது..
சில இடங்களில் சுகவீனத்தால் படுக்கையில் கிடக்கும் வயதான பெரியவர்கள் சாப்பிட ஏதாவது கேட்டால் "சாப்பிட்டு விட்டு மலம் கழிக்கவா" என்ற சடாரென கேட்டு விடுகிறார்கள்...
"நீராகாரம் மட்டும் கொடுத்தால் போதும் "என்று அவர் காதுபடவே சொல்லி இவர்களாகவே அவருடைய ஆயுளுக்கு முற்றுபுள்ளி வைத்து விடுகிறார்கள்..
சில இடங்களில் ஏதாவது சுகவீனம் வந்தால் கூட " அப்படிச் செய்தீர்களலல்லவா அதனால் தான் இப்படி நேர்ந்து விட்டது" என்று சந்தர்ப்பம் தெரியாமல் மனதை நோகடித்து விடுவார்கள்...
இது போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சம்பந்த பட்டவர்கள் செய்த வேண்டாத காரியங்களை எல்லாம் பட்டியல் போட்டுச் சொல்லிக் விடுவார்கள்..
அந்த நேரத்தில் சம்மந்தபட்டவருக்கும் குழந்தை போல கேட்பதை தவிர வேறு வழித் தெரியாது..
இதற்கு காரணம் பிறர்
நம்மை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் புரிதல்கள்..நடவடிக்கைகள்..
ஏழைகளை விட பணக்காரர்கள் பாடு தான் ரெம்ப கஷ்டம்..
வயசான பணக்காரர்கள் படுக்கையில் கிடந்து விட்டால் அவ்வளவு தான்..திரும்பி பார்க்க சிரமம் தான்..
இவர்களை வீட்டு வேலைக்காரர்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்..
அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் தள்ளாத முதுமையை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்..

தனிமரத்தோப்பு .... !*

வெந்தபுண்ணில் வேல்வீசி
----- மாபாதகம் செய்திடுவார்
தாமே வலியவன்றெண்ணியே
----- எளியோரை வஞ்சிப்பார்
பூமியைமிதித்தே நடப்பார்
----- தொடக்கம் தெரியாதோர்
வல்லோன் இறையோனை
----- கிஞ்சித்தும் நினையாதோர்
மண்ணில் பிறந்தோரெல்லாம்
----- ஒருநாள் மரித்திடுவார்
நிலைத்தே நிற்பேனென
----- நினைப்பதும் அறிவீனமே

Saturday, October 21, 2017

வெள்ளியின் நினைவு...!

Samsul Hameed Saleem Mohamed
கடந்து இருவாரங்களுக்கு முன்பாக ஒரு தொலைபேசி அழைப்பு! எனது மானசீக ஆசிரியப்பெருந்தகை பெருமரியாதைக்குரிய சீசன்ஸ் முஹம்மது அலி அவர்களிடமிருந்து. எனது பேரன் துபாயிலிருந்து ஊருக்கு வந்திருக்கிறார் அவருக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்! அதனால் நீங்கள் வீட்டில் சாவகாசமாக இருக்கும் நாளை சொல்லுங்கள் அழைத்து வருகிறேன் என்று.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மாவுடைய தொழுகைக்கு நீடூர் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தபோது தனது இளைய மகனார் அண்ணன் Mohamedali Nowshathali மற்றும் பேரன் சகிதம் முஹம்மது அலி அத்தா அவர்கள் பள்ளியில் அமர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்தவனாக தொழுகைக்காக நானும் அமர்ந்து அதை நிறைவேற்றி வெளியில் வந்து அத்தா அவர்களுக்கு சலாம் சொன்னவுடன் ஆரத்தழுவி கொண்டார்கள் என்னையும் அங்கிருந்த லண்டன் Haja Maideen அவர்களையும் மிகவும் மகிழ்ச்சி பொங்க....!
வெளியில் வந்து மிகவும் பெருமிதம் கொண்டு என்னையும் அண்ணன் லண்டன் ஹாஜா மைதீன் அவர்களையும் தனது பேரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்! பள்ளியின் அருகில் இருந்த ஹாஜா மைதீன் அண்ணன் வீட்டிற்கு முதலில் சென்று சிறிது நேரம் அளவளாவி விட்டு! பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்!

Friday, October 20, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ரபீக் சுலைமான் (Rafeeq Sulaiman)




அன்பு நண்பர் Rafeeq Sulaiman  என்னை பாசத்துடன் உறவு முறையாக மாமா என்றுதான் அன்புடன் அழைப்பார்.
புதுசுரபி என்ற புனைப்பெயருடன் புதுக்கோட்டையிலிருந்து Rafeeq Sulaiman என்ற உயர்வான பெயருடன் புறப்பட்டு தமிழுக்கும் மக்களுக்கும் சேவை ஆற்றும் நேசிக்கப் படக்கூடிய நண்பர்
Rafeeq Sulaimanஇறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் Rafeeq Sulaimanஅவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

Thursday, October 19, 2017

பேராசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, தன்னை அறிதல் பற்றிப் பேச முடிந்தது.




இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு பொதிகை சித்ரா அலைபேசினார். பொதிகையில் மீண்டும் நம் விருந்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தயாரிப்பாளர் விஜயனும் தொகுப்பாளினி ப்ரியங்காவும் பேசினர். ஒத்துக்கொண்டேன்.
பிறகுதான் அதில் இருந்த பிரச்சனை புரிந்தது. நிகழ்ச்சி ‘லைவ் ப்ரொக்ராம்’. ஏற்கனவே எடுத்த நிகழ்ச்சி மாலையில். வேறொரு நாள் காலையில் போட்டார்கள்.
ஆனால் இது உண்மையிலேயே லைவ்!
காலை ஆறே காலிலிருந்து ஆறரைக்குள் வந்துவிடுங்கள் என்று திரு விஜயன் சொன்னார். நானும் சரி என்றேன்.

40 "ரப்பனா! (எங்கள் இறைவனே!) துவா / 40 Rabbana Dua


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். [2:127]
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். [2:128]
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக. [2:201]
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு  உதவி செய்வாயாக. [2:250]

சகலவிதமான புகழும் சர்வ உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹ்! எங்களுக்கு உறுதியான ஈமானையும் .நேயமான  பாக்கியத்தையும். கிருபையான பார்வையும்,  பரிபூரண அறிவையும், தெளிவான ஹிருதயத்தையும், நற்செயல்கள் புரிய நல்லுதவியையும், அழகிய பொறுமையையும், மகத்தான நற்கூலியையும், தியானம் செய்யும் நாவையும், கஷ்டங்களை சகித்திக் கொள்ளும்  உடலையும், நிரந்தரமான ஆகாரத்தையும், அமல்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரார்த்தனையும், எங்களுக்கு அருட்கொடையான பிர்தவ்ஸ் என்னும் சுவர்கத்தையும் தந்தருள்வாயாக !
மஹா கிருபையாளனே! உனது சலவாத்தும். பரக்கத்தும் எங்களின் தலைவரான முஹம்மது நபி (ஸ் ல்)அவர்களின் மீதும், அன்னாரின் உற்றார்  உறவினர்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக ! இன்னும் சகலவிதமான புகழும் சர்வ உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானது.

Tuesday, October 17, 2017

​​'ஷூ' - பெற்றோர் ஆசிரியர் கவனத்திற்கு!

Rafeeq Sulaiman
​​'ஷூ' - பெற்றோர் ஆசிரியர் கவனத்திற்கு!
                                 -------------------------------------------------------------------
'ஷூ' அணிவித்து பள்ளி செல்லும் நமது பிள்ளைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படியொரு கேள்வியை வைத்த முன் பதிவில் பெரும்பாலோனோர், "இது தேவையற்றது - நம் கலாச்சாரத்தில் இல்லாதது." என்று பின்னூட்டம் எழுதியிருந்தார்கள்.
கலாச்சாரத்தையும் தாண்டி இது குழந்தைகளுக்கு நாம் தரும் கடும் தண்டனை, கற்பதற்காக அனுப்பும் நாம் அதற்கே தடைபோடுகிறோம் என்கிறது ஆராய்ச்சி. அதுவும் இந்தக் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று சாடிக்கொண்டிருக்கிறோமோ அதே மண்ணில்தான் இந்த உண்மையைத் தெரிவித்திருக்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்துகொண்டே வந்திருக்கிறோம். வருகிறோம்.

இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்துகொண்டே வந்திருக்கிறோம். வருகிறோம்.
குறிப்பாக சமீபகாலமாக வெகு வேகமாக இழந்திருக்கிறோம்
முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்றைய வாழ்வை ஒப்பிட்டால் தலை சுற்றுகிறது

குர்ஆன் மனிதர்களுக்கு போதிப்பது என்ன?


சிறு தொகுப்பு!!

1. அல்லாஹ்வுக்கு எதையும்/எவரையும் இணையாக்க கூடாது    
*குர்ஆன் 17:23*

2. ஒப்பந்தங்களை முறித்து மாறு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:27,16:92*

3. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*குர்ஆன் 2:27,47:22*

4. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*குர்ஆன் 2:42*

5.  நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*குர்ஆன் 2:44 61:2*

6. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது.
*குர்ஆன் 2:60*

7.  ஆன்மீக ஏமாற்றம் செய்து பிழைக்க கூடாது.
*குர்ஆன் 2:79*

Monday, October 16, 2017

5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?

5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?

👉 இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.

👉 நாம் நலமுடன் இருக்க இந்த 5G உணவு முறையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

👉 சரி.... முதலில் 5G யில் வருகின்ற பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

5G உணவுகள் :

👉 *இஞ்சி (Ginger)*

👉 *பூண்டு (Garlic)*

👉 *நெல்லிக்காய்* (Gooseberry)

👉 *கிரீன் டீ (Green tea)*

👉 *பச்சை மிளகாய*் (Green chilly)

Sunday, October 15, 2017

நல்லதை பகிர்வோம்😊/ Best of twitter 2016:

R பரசுராம்

twitter.com/chevazhagan1:
சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்!

twitter.com/sowmya_16:
அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

Saturday, October 14, 2017

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் ஒழுங்காக வண்டியோட்டுவோரைப் பாராட்டி பரிசு வழங்குவதுதானே முறை...

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக வாகனம் செலுத்துவோரை ராடார் மூலம் கண்காணித்து, அந்தந்த வேகத்திற்கேற்ப அபராதம் விதித்து வருகிறது துபை போலீஸ். சரி, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் ஒழுங்காக வண்டியோட்டுவோரைப் பாராட்டி பரிசு வழங்குவதுதானே முறை...
தொழில்நுட்ப உதவியுடன் அதை செய்ய முன்வந்திருக்கிறது துபை போலீஸ்.
நேற்று துபை சர்வதேச வர்த்தக மையத்தில் நிறைவுற்ற ஜிடெக்ஸ் தொழில்நுட்பக் கண்காட்சியில் துபை போலீஸ் ஒரு செயலியை (Mobile Application) அறிமுகம் செய்தது.

Friday, October 13, 2017

உணர்வின் ஒலிவடிவம் ....!

உணர்வின் ஒலிவடிவம் ....!
மொழி மனிதர்கள் உணர்வுகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஒலிவடிவம்.
உகாண்டா காரருக்கு தமிழ் தெரிந்திருக்க அவசியமில்லை. அவர்கள் நாட்டில் வாழும் தமிழனாக எனக்கு அவர்களின் மொழியை தெரிந்துகொள்வது ஒரு அடிப்படை தேவை. இங்கு பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறைந்தது பத்து மொழிகளை பேச முடியும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் மொழிகள் மனிதர்களை இணைக்கவேண்டும் பிரிக்கக்கூடாது.

இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன்

WRITTEN BY சு. ர. அமானுல்லாஹ். 
ஐரோப்பா தனக்குக் கடமைப்பட்டிருக்க இஸ்லாம் அதற்கு எதைக் கொடுத்திருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நமக்குத் துணையாய் நிற்பது உலக சரித்திரம்.



மனித வர்க்கம் தன்னை நாகரீகப்படுத்திக்கொண்டு வந்த நாட்களில் ஐரோப்பா அதற்கு எந்த ஒரு பயனையும் அளிக்க முன்வரவில்லை; முன்வர முடியாமலும் போய்விட்டது. எப்போது கிழக்கில் நாகரீக சூரியன் உதிக்க ஆரம்பித்தானோ அப்போது ஐரோப்பா அநாகரீக இருளிலே மூழ்கிக் கிடந்தது. அப்பொழுது அது இருந்த நிலை மிருக வாழ்க்கையின் அந்தஸ்தையே மிஞ்சக்கூடியதாயிருந்தது.

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டைக்கு சிறு வயதில் சென்று வந்தது மனதில் பசுமையாக உள்ளது .
திரும்பவும்  அன்று எனது பேரன் சமீர் அலியோடு போய் வந்தது மனதில் பெரு மகிழ்வை தருகின்றது .
லால்பேட்டை மக்கள் மிகவும் ஒற்றுமையாக தங்கள் ஊரின் முன்னேற்றதிற்கு பெரும் பங்காற்றுகின்றனர்.
லால்பேட்டையை சுற்றி பார்ப்பதில் நண்பர் அஹ்மது ரிலா அவர்கள் மிகவும் உதவினார்கள் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுதது மனதிற்கு அமைதியை தந்தது .


லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியை பார்த்த பின்பு எனக்கு மிகவும் வேண்டிய தமிழ் மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துற்றஹ்மான் ஹஜ்ரத் அவர்களை லால்பேட்டை அவர்களது வீட்டில்  சந்தித்தேன்.
ஹஜ்ரத் அவர்களுடன் சிறு வயதிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு .அவர்கள் நீடூர் ஜாமியா அரபிக் கல்லூரியில் ஓதியவர்கள் .
அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அன்புடன் 'ஜின்னா' என்று என் பெயரை அழைத்து கட்டி அணைத்து தனது அன்பைக் காட்டினார்கள் .

பேரன் சமீர் அலியுடன் முகம்மது அலி

லால்பேட்டை அரபிக் கல்லூரியில் Ahamed Rila மற்றும் Mohamed Ali



லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் கூடத்தில் Mohamed Ali
— with Ahamed Rila.
அதன் பின்பு லால்பேட்டை ஊரை முழுமையாக பார்த்து வீராணம் ஏரியையும் பார்த்து வந்தோம் லால்பேட்டை வீராணம் ஏரி அருகில்



 அஹ்மத் ரிலா இல்லத்தில்
Ahamed Rila Mohamed Ali மற்றும் அஹ்மத் ரிலாவின் தந்தை ஹஜ்ரத், நூருல்லாஹ் அவர்கள்

 ***********************************************************************

Thursday, October 12, 2017

கூப்பிடு தூரத்தில் ஒரு சிறு கவிதை

கூப்பிடு தூரத்தில் ஒரு சிறு கவிதை
கூப்பிடு தூரத்தில் ஒரு பெருங்கனவு
கூப்பிடு தூரத்தில் ஒரு கொடுங்களவு
கூப்பிடு தூரத்தில் ஒரு பரிசுத்த நேசம்
கூப்பிடு தூரத்தின் ஒலியலகெம் 
குரல்வளையின் பிடியில்
கூப்பிடு தூரத்தின் விருப்பத்திசையெம் 
நஃப்ஸின் கோரப்பிடியில்
கூப்பிடு தூரத்தின் ஏவலடிமையாகிக் 
கூனாதுன்னருள் புரியவும்
கூப்பிடு தூரத்தின் கடிவாளம் கைக்குள் படிந்து
கூர்மையுற அருள்புரியவும்

நதிகளில் கலந்த .....

நதிகளில் கலந்த 
மனிதகழிவுகளை உட்கொண்ட 
சமுத்திரத்தின் துவர்ப்பு
மேககூட்டங்களின் உயர்ந்து 
தூய்மை பெற்று மீண்டும் 
பரிசுத்தமாக பூமிபந்தில் விழுகிறது.
மனிதா
ஏதாவது ஒரு நதிக்குள் செல் 
அது சமுத்திரத்தை அடைந்துக்கொள்ளும்.
துளிகளில் உள்ள கழிவுகளை 
தூய்மை செய்ய
ஆகாயத்து அழைப்பு 
கரம் விரித்து காத்திருக்கிறது.
ஆகா மழை பரிசுத்தமானது 
அதன் துளிகள் அர்ரஹீமின் அன்பை சொல்கிறது.
- வழிப்போக்கன்

Wednesday, October 11, 2017

உலக பெண் குழந்தைகள் தினம் ...

சில நிமிட சிந்தனைகளில் உருவான எண்ணங்களால் வடித்துள்ள இந்த பதிவுக்கு கிட்டுவது வெற்றியா (அ) தோல்வியா என்பது உங்களது விரல்களில் ஒளிந்து கிடக்கிறது ...
பேரிறைவனின் பேரருளால் பெண் குழந்தைகள் பிறந்தால் பறக்கத்தும் ரஹ்மத்தும் இணைந்தே பிறக்கும் என்பதை பிரசவிக்கும் பெரும்பாலான தாய்மார்கள் மகிழ்வோடு அனுபவித்து உணருவார்கள் ....
நமது இல்லங்களில் பெண் குழந்தைகள் நடமாடி ஆரவாரமாய் துள்ளி விளையாடினால் உண்மையிலே அந்த தருணங்கள் நமக்கு குதூகலங்களை அள்ளித் தரும் ...

நான்கு தோப்புகள் வைத்திருப்பதும் .....

Iskandar Barak

நான்கு தோப்புகள் வைத்திருப்பதும்
நான்கு பெண்பிள்ளைகள் வைத்திருப்பதும் ஒன்னுதான் யென்பார் ..எங்க தெரு நாகப்பன் தாத்தா
இது போலவே ...
நான்கு காடுகள் வைத்திருப்பதும்
நான்கு ஆண்பிள்ளைகள் வைத்திருப்பதும் ஒன்னு யென்பார் ..எங்க மச்சான் முத்துமுஹம்மது
இரண்டுக்குமுள்ள வித்தியாசம் இதுவே ...
தோப்புகளில் எப்போதும் வருமானமிருக்கும் வசந்தமிருக்கும் சின்ன சின்ன உழைப்புகளே போதுமானு அது போலவே ..பெண் பிள்ளைகள்

Tuesday, October 10, 2017

​​'நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள் அல்லது ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண்பீர்கள் ?'

முஆத் இப்னு ஜபல் (RA)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஹலால் மற்றும் ஹராமில் எனது நாட்டிலேயே அதிகமான கற்றறிந்த மனிதர் முஆத் இப்னு ஜபல் (RA)' என்று தெரிவித்துள்ளார்கள்
. ஏமன் நாட்டில் அப்பொழுது மிகவும் மோசமான நிலையில் மக்கள் மிகவும் தவறுகள் செய்பவர்களாக இருந்தனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆத் இப்னு ஜபல் (RA) அவர்களை கவர்னராக யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள் அனுப்பியபோது,
​​'நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள் அல்லது ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண்பீர்கள் ?' என்று கேட்க
'நான் குர்ஆனில் காண்பதிலிருந்து தீர்வு காண்பேன் ' என்று முஆத் இப்னு ஜபல் (RA)) தெரிவித்தார்கள்
நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீங்கள் குர்ஆனில் தேடிக் கொண்டிருக்கும் ஆணையை நீங்கள் காணாவிட்டால் என்ன செய்வீர்கள்?'
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவின் வழியில் தீர்வைக் கொடுப்பேன் என்று முஆத் இப்னு ஜபல் (RA) தெரிவித்தார்கள்
'நீங்கள் ஸுன்னாவிலும் கூட ஒரு தீர்ப்பைக் காணவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?'
'என் அதிகாரத்தில் மிகச் சிறந்ததைக் கொண்டு, நான் நியாயமாகக் கையாள்வதன் மூலம் மனிதர்களிடையே தீர்ப்பளிப்பேன்.'என்று முஆத் இப்னு ஜபல் (RA) தெரிவித்தார்கள்
----------------------------------------------------------------------

Monday, October 9, 2017

சுகந்திர தின கொண்டாட்டங்கள் - உகாண்டா.

சுகந்திர தினத்தை கொண்டாடும்விதமாக பற்பல நிகழ்ச்சிகளும் நடந்துவரும் நிலையில் எனது நேரடி பங்களிப்பு சிலவற்றில் எப்போதுமே இருக்கும். அதில் பன்னாட்டு கோல்ப் விளையாட்டு போட்டிகள் நடந்து நேற்று பால்ம் வேல்லி கோல்ப் கிளப்பில் முடிவடைந்தது.
அதன் சிறப்பு காணொளிகளை நட்புகளுக்காக மேலான பார்வையிக்காக பதிந்துள்ளேன்.
ராஜா வாவுபிள்ளை 

எழுதியது கடிதம் அல்ல ....!

கைப்பட கடிதம் எழுதும் பழக்கம் தற்காலத்தில் வழக்கு குறைந்து வருகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரியது.
தொண்ணூறுகளில் வரை பிறந்தவர்கள் மாதம் ஒருக்கடிதம் யாருக்காவது எழுதுவது இயல்பாய் இருந்தது. உறவின் தொடர்புகளை இறுகக்கட்டி வைத்திருந்தது.
மின்னஞ்சலும் குறுஞ்செய்தியும் முன்னேற்றம்தான் விரைவுதான் ஆனாலும் கடிதத்தொடர்பில் இருந்த ஆத்மார்த்தம் இருக்கவில்லையே என்று எண்ணுகிறேன்.

Sunday, October 8, 2017

அறிவே ஆற்றல் சக்தி பெற்றது / KNOWLEDGE IS POWER



இளைய வயதில் இதயத்தில் அல்-குர்ஆனை மனனம் செய்வது ஒரு பெரிய ஆசீர்வாதம் மற்றும் சர்வ வல்லமையுள்ள இறைவனிடமிருந்து ஒரு அரிய பரிசாகும். மனனம் செய்த குழந்தைகள் என் பேரக்குழந்தைகளாக இருப்பதால் தாத்தாவாகிய  எனது  மகிழ்ச்சியை  வார்த்தைகளில் விளக்க முடியாது
அனைத்துப் புகழும் அல்லாவுக்கே உரித்தானது
நான் அக குழந்தைகள் பெருமையடையும்  தாத்தாவாக இருக்கின்றேன் , அக்  குழந்தைகள் தாரிக் மற்றும் ஹம்சா.ஆவர்
இந்த நிகழ்வு  எனது மகள் மற்றும் மருமகன்  முற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அவர்கள் இறைவனால் குழந்தைகளின் ஆசீர்வாதிக்கப்பெற்ற பெற்றோர்.
இந்த விழா வெள்ளிக்கிழமை USA இல் நடைபெற்றது. சிறுவர்களை ஆசீர்வதிப்பதற்காக குறிப்பாக அமெரிக்காவுக்குச் சென்ற என் மகன் ஆஷிக் இந்த கானொளியில் பேசுவதை பார்க்கலாம்

KNOWLEDGE IS POWER

Memorising the Holy Quran by heart at younger age is a great blessing and a rare gift from the Almighty Lord.If the kids happened to be my grandchildren the happiness of the grandfather can't be explained in words.


I am the proud grandfather of the kids, Taariq and Hamza. The event is arranged by my daughter and son in law - the blessed parents of the kids. The function was held at USA on Friday. The special address was given by my son Ashiq who has especially flown to USA to bless the kids.
Vavar F Habibullah 


Saturday, October 7, 2017

கட்டிப் போடப்பட்ட வெள்ளாடு..!. / நிஷா மன்சூர்

#கமலா சுரைய்யா
அறியாமையின் தூணில்
கட்டிபோடப் பட்ட ஜந்து நான்
ஒருமுறை தூணைச் சுற்றி
மீண்டும் திரும்பிப்போய்
இன்னொரு முறை சுற்ற மட்டுமே முடியும்
வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள்
என்னை வழிமறித்து நிறுத்துகின்றன.
எனக்கு இந்தக் காலத்தின் உளவியல்
அப்படியொன்றும் பிடிபடுவதில்லை
அதற்கு முலையூட்டும்
தத்துவ சிந்தனை என்று அவர்கள் அழைக்கும்
தாயையும் எனக்குப் புரியவில்லை
எனக்கு அறிமுகங்கூட இல்லாத
ஒருவரைக் காயப்படுத்த
என்னால் முடியாது

தோழியரே தோழியரே...

ஓ பெண்ணே நீ போகாதே பின்னே
நீ பின்னுக்குப்போனால்
வாழ்க்கை மண்ணாகிப் போகும்
உன் கண்ணுக்கு முன்னே
போராடு
யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க
உன்னோடு இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க
முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும் மூர்க்கச் செயலல்ல

மறைந்திருக்கும் மருமம் ....!*

இன்றைய நிதர்சனத்தின்
விளிம்பில் நின்று
திடுக்குற்று வந்தவழியை
திரும்பிப் பார்கிறேன் ....
மனம் லயித்திருந்த
மாயங்கள் முழுமையிற்றி
துணுக்குகளாய் மின்மினுத்தன

Friday, October 6, 2017

தேடல் ....! (பாகம் - 4)


ஆனந்தத்தின் தேடலில்
உலகமாயையில் உழன்றேன்
வேறெங்குமில்லை  என்னுள்ளத்தில் 
குடியிருக்க கண்டேன் 

முழுஓய்வின் தேடலில்
பொழுதுபோக்கை நாடினேன்
நல்லமனிதனுக்கு மரணத்தின்பின் 
மண்ணறையிலென கண்டேன் 

Thursday, October 5, 2017

இஸ்லாமிய அறிவியலின் வரலாறு

பி.ஏ. கிருஷ்ணன்
உஸ்பெகிஸ்தானின் கிவா நகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அல்-குவாரிஸ்மியின் சிலை.

பழங்கால அறிவியலுக்கும் தற்கால அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்கள் இஸ்லாமிய அறிவியலாளர்கள்.

சில மாதங்களுக்கு முன்னால் நான் உஸ்பெகிஸ்தானில் இருக்கும் கிவா நகரத்துக்குச் சென்றிருந்தேன். 19-ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரத்துக்குப் பெயர் போன கிவா நகரக் கோட்டைக்கு வெளியே ஒரு சிலை. பக்கத்தில் சென்று பார்த்தால், அல்-குவாரிஸ்மி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் அறிவியல் அறிஞர் ஒருவரது சிலையை அண்ணா சாலையில் பார்த்தால் ஆச்சரியமாக இருக்காதா? அதே போல.

அல்-குவாரிஸ்மி - யார் இவர்?

ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த இந்த அறிஞர் அல்ஜிப்ராவின் தந்தை என அறியப் படுபவர். சந்திரனில் ஒரு பள்ளத்தாக்கு இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் எழுதிய பல புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றவை இரண்டு. முதலாவது ‘இந்திய எண்களைக் கொண்டு கணக்கு’. இந்தப் புத்தகத்தின் மூலமாகத்தான் இப்போது அரேபிய எண்கள் என அழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த எண்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டன. இரண்டாவது, ‘ஸிஜ் அல் ஸிந்த் ஹிந்த்’ என்று அறியப்படும் வானவியல் அட்டவணை. சூரியன், சந்திரன் மற்றும் அவரது காலத்தில் அறியப்பட்டிருந்த ஐந்து கிரகங்களின் பாதைகளின் அட்டவணை. இவருக்கு முன்னாலேயே எட்டாவது நூற்றாண்டில் பிரம்மகுப்தரின் பிரம்ம சித்தாந்தம் என்ற வானவியல் நூல் அல்ஃபசாரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் இவரது அட்டவணைதான் அரேபியர்கள் தாங்களாகத் தயாரித்த முதல் அட்டவணை.

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர்
மௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி
Abdul RahmanM.A.,அவர்கள்
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கமௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி அவர்கள்
அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
உலக கல்வியோடு மார்க்க கல்வியும் கற்றவர்
சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர்
ஆங்கிலம் ,அரபு ,உருது, மற்றும் தாய்மொழி தமிழும் இவர் புலமை பெற்றவைகள்

நாணமே நீயிடும் அரிதாரம் நீ

நாணமே நீயிடும் அரிதாரம் 
நீ 
வைகறைப் பனிவிழும் 
புல்மடியோ - மலை 
வாழையில் வெடித்த பொற் 
கனிநிலவோ
அந்தி 
வானத்துச் சந்தன 
ஒவியமோ - நதி 
கடலுக்குச் சூட்டிடும் 
நுரைச்சரமோ

Wednesday, October 4, 2017

கோடைக்கு இரை ஈரம் - எம்.ரிஷான் ஷெரீப்

யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்


வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன


அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது

கைகள் வேட்டிக்குள்ளேயே வந்துவிட்டன

கைகள்
வேட்டிக்குள்ளேயே
வந்துவிட்டன
தமிழன் இன்னும்
விழித்துக்கொள்வதாய்
இல்லை
அவன்
ஒரு சோம்பேறி மயக்கத்தில்
சுருண்டு கிடக்கிறான்
மானம் பறிபோகிறது
என்ன செய்ய முடியும் என்கிறான்

குழந்தைகளின் மனசு பூப்போன்றது..

குழந்தைகளின் மனசு பூப்போன்றது..அது சிறிதாக கசங்கினாலும் உதிர்ந்து விடும்..
குழந்தைகள் நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்க்கிறது..நாம் சிரித்தால் சிரிக்கிறது..நாம் அழுதால் அதுவும் அழுகிறது..
குழந்தைகளோடு
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாலே மனதுக்கு மகிழ்வானதாக இருக்கும்..
சிலர் குழந்தைகளோடு விளையாடுவார்கள்..அப்படி விளையாடும் போது குழந்தை போலவே ஆகி விடுவார்கள்..

Sunday, October 1, 2017

உலக மக்கள் யாவருக்கும் உரிமை யானவர்

உலக மக்கள் யாவருக்கும்
உரிமை யானவர்
உருவமற்ற இறைவனுக்கு
உண்மையானவர்!
சிலை வணக்கம் செய்த
அரபு நாட்டிலே
சீர்திருத்த சேவை
செய்ய வந்தவர்
தலை சிறந்த ஏக
தெய்வ வீட்டிலே
தரணி வாழ வழிவகுத்து தந்தவர்