Friday, October 6, 2017

தேடல் ....! (பாகம் - 4)


ஆனந்தத்தின் தேடலில்
உலகமாயையில் உழன்றேன்
வேறெங்குமில்லை  என்னுள்ளத்தில் 
குடியிருக்க கண்டேன் 

முழுஓய்வின் தேடலில்
பொழுதுபோக்கை நாடினேன்
நல்லமனிதனுக்கு மரணத்தின்பின் 
மண்ணறையிலென கண்டேன் 


ஆன்மீகத்தின் தேடலில்
புனிதத்தலங்களுக்கு ஓடினேன்
இறைமையின் நேரடிதொடர்பில் 
என்னுள்ளில் கண்டேன் 

நாணயத்தின் தேடலில்
நாடுநகரத்தில் உழைத்தேன்
நா நயத்துடன் இருப்பதை 
பகிர்வதில் கண்டேன்!

புரிதலின் தேடலில்
பூரணங்களை வேண்டினேன் 
பூர்த்தியாகி கிடைக்கவில்லையெனினும் 
ஆத்மார்த்ததில் 
கண்டேன் 

No comments: