Thursday, November 30, 2017

மௌனம் என்பது


மௌனம் என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பதல்ல. தன்னிலே  ஆழ்ந்து இழந்திருப்பது. துளை இடப்பட்ட மூங்கில் அதாவது புல்லாங்குழலை பாருங்கள் அது எங்கு இருந்தாலும்  தனக்குள் எதுவுமே இல்லாத தாய் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூல்கியே இருக்கும். தன்னை ஒருவர் இசைக்கின்ற வரை.

இதுபோலத்தான் நீங்கள் இறைவணக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் உறுப்புகள் மறைந்து வெற்றிடமாக மாறும். இந்நிலையில் இருக்கும்போது மனம் அமைதி அடைந்து. மனம் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி மனம் இல்லாமல் போகும். உங்கள் ஆன்மாவை உணர்ந்து ஆன்மாவில் இறை உணர்வை உங்களால் உணர முடியும்.


ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருந்ததால்தான்​ புல்லாங்குழலால் காற்றை சுவாசித்து இசையே உணர்ந்து வெளிப்படுத்தியது.

இறைவணக்கம், இறை தேடல், இறை காதல், இறைவனிடம் சரணாகதி அனைத்தும் வெளியில் இல்லை. நீங்கள் உங்களுக்குள் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருந்ததால் மட்டுமே உணர முடியும்.

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ    وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏ 
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 50:16)

*மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*

No comments: