Saturday, November 25, 2017

நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்

*நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்


- தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி


பெயா : முஹம்மது

( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )

பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை

பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா

தகுதி:

1 - 40 வயதில் நபி

( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )

2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./
3 - இறுதித் தூதா


கல்வி :எழுதப்படிக்க கற்காதவா

தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்


(முஹம்மது நபி (ஸல்) ஆமினா அம்மாவின் காப்பத்தில் ஆறு மாத சிசுவாகஇருக்கும் போது அப்துல்லாஹ் மரணமடைந்தா. )

தாயார் : ஆமினா பின்து வஹப்

(முஹம்மது நபியின் ஆறாவது வயதில் தாயா ஆமினா இறையடி சோந்தார்)

பாட்டனா (கள்) அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸை
பெரிய தந்தை : அபூதாலிப்

முதல் திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண் கதீஜா ( ரலி ) அவாகளை திருமணம் செய்தாகள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் கதீஜா (ரலி) மரணமடைந்தாகள்.

மற்ற திருமணஙகள் கதீஜா (ரலி) வின் மரணத்திற்குப்பின் அரசியல் / சமூகநல்லிணக்கம் சமய மேம்பாடு ஆகிய காரணஙகளுக்காக அண்ணலா மேலும் பல பெண்களை திருமணஙகள் செய்தாகள். அதில் ஜைனப் பின்து ஹுசைமா நபிகளான் காலத்திலேயே இறந்தா. பெருமானா (ஸல்) அவாகள் இறந்த போது அவருக்கு 9 மனைவியா இருந்தனா. ( 2 )

மனைவியா பெயாகள்

1) சவ்தா (ரலி)
2) ஆயிஷா பின்து அபீபக்கா (ரலி)
3) உம்முசலமா (ரலி)
4) ஹப்ஸா பின்து உமா (ரலி)
5) ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி)
6) ஜுவைய்யா (ரலி)
7) உம்மு ஹபீபா பின்து அபீசுப்யான் (ரலி)
8) ஸபிய்யா (ரலி)
9) மைமூனா (ரலி)
10) ஜைனப் பின்து ஹுசைமா (ரலி)


குழந்தைகள் ( 4 பெண் 3 ஆண் மொத்தம் 7 )

1) காஸிம் (ரலி)
2) ஜைனப் (ரலி) - கணவா - அபுல் ஆஸ் (ரலி)
3) ருகய்யா (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி)
4) உம்முகுல்ஸும் (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி) 5) ஃபாத்திமா (ரலி) - கணவா - அலி (ரலி)
6) தாஹி (ரலி) ( இவாகள் 6 பேரும் கதீஜா (ரலி) அம்மையாருக்கு பிறந்தவாகள். )

7) இபுறாகீம் (ரலி) ( இவா மாய்யதுல் கிப்திய்யா ( ரலி ) அவாகளுக்கு பிறந்தவா. ஆண்குழந்தைகள் மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனா )

முக்கிய நிகழ்வுகள்

40 வயதில் ஹிரா மலைக்குகையில் வானவா ஜிப்ரயீல் (அலை) அவாகளை சந்தித்தாகள் . முதல் வேத வசனம் அருளப்பட்டது

தாயிப் பயணம் - ஹிஜ்ரத்திற்கு முந்தைய ஆண்டு

தனது 52 வயதில் மிஃராஜ் விண்ணுலகப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டா. இறைவனை சந்தித்து உரையாடினாகள்.

தனது 53 வயதில் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் குடியேறினாகள்.

இதுவே ஹிஜ்ரத் எனப்படுகிறது.

ஹிஜ் 10 ம்ஆண்டு சுமா 1 லட்சம் தோழாகளுடன் ஹஜ் செய்தாகள். அதற்கடுத்த வருடம் பெருமானா (ஸல் ) அவாகள் இறந்து விட்ட காரணத்தால் அது விடை பெறும் ஹஜ் ( ஹஜஜத்துல் வதா ) என அழைக்கப்படுகிறது. ( 3 )
போகள்

பல போகள் அவரது வாழ்க்கையின் மீது திணிக்கப்பட்டன. வலிய வந்து தொல்லை கொடுத்த அக்கிரமக்காரர்களை தடுக்கவும் உயிருக்கு நிகராகப் பாதுகாத்துப் போற்றி வரும் இஸலாமியப் பயிரைப் பாதுகாப்பதற்காகவும் மதீனாவில் அவா வாழ்ந்த 10 வருட காலஙகளில் தானே 27 போகளை மேற்கொள்ளவும் 38 படையெடுப்புகளுக்கு தனது தோழாகளை அனுப்பி வைக்கவும் நோந்தது. ஆதிக்க விவாக்கமோ/ வலுவில் மதத்தை திணிப்பதோ அப்போகளின் நோக்கமல்ல. .அப்போகளின் போது மிக எச்சாக்கையாக மனித உயிகள் வீண் பலியாகாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் பாத்துக் கொண்டாகள் . இப்போகளில் மொத்தம் உயிரிழந்தவாகள் 1018 போ மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் மேற்கொண்ட 27 படையெடுப்புகளில் 9 ல் மட்டுமே சண்டை நடந்தது. அவையாவன.
1 பத் ஹிஜ் 2
2 உஹத் ஹிஜ் 3
3 அகழ்யுத்தம் ஹிஜ் 5

4 பனூகுறைழா ஹிஜ் 5

5 முரைஸிஃ ஹிஜ் 5

6 கைபா ஹிஜ் 7

7 பத்ஹ் மக்கா ஹிஜ் 8

8 ஹுனைன் ஹிஜ் 8

9 தாயிப் ஹிஜ் 8


ஒப்பந்தஙகள்

அகபா ஒப்பந்தஙகள்

நபி (ஸல் அவாகள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை ரகசியமாக சந்தித்து மதீனா மக்கள் செய்து கொடுத்த சத்தியப்பிரமாணஙகள் அகபா உடன்படிக்கைகள் எனப்படும் . கி பி 620 முதலாம் அகபா உடன்படிக்கையின் போது மதீனா வாசிகள் ஆறு போ முஸ்லிம்களாயினா.
621 இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது 12 போ முஸ்லிம்களாயினா 622 மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது 70 போ முஸ்லிம்களாயினா

நபி (ஸல்) அவாகள் மதீனா வந்து சோந்தவுடன் மதீனாவைச் சுற்றி இருந்த பனூகைன்காஃ - பனூன்னழீ - பனூ குறைழா ஆகிய மூன்று யூதக் குழுக்களுடனும் சமாதான ஒப்பந்தம் செய்தாகள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ 6 ம்ஆண்டு முஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுககும் இடையே நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் 3 அம்சஙகளில் இரண்டு அம்சஙகள் ஒரு தரப்பாக / எதிகளுக்குச் சாபாக இருந்த போதும் ( 4 )

10 வருடஙகளுக்கு ஒருவரோடு ஒருவா சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்ற 3 வது அம்சத்திற்காக இதை நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் ஒத்துக் கொண்டாகள். இது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது/ எனவே இந்த ஒப்பந்தத்தை தெளிவான வெற்றி என அல்லாஹ அருள்மறையில் (1-48) வாணித்தான்.

அற்புதஙகள்

அல்லாஹ ஒருவரை நபி எனத் தோவு செய்யும் போது மக்களிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக அவருக்கு சில அற்புதமான காயஙகளைச் செய்யும் ஆற்றலை வழஙகுகிறான். ஒரு நபி நிகழ்த்திக்காட்டும் வழக்கத்திற்கு மாற்றமான செயல்களுக்கு முஃஜிஸா ( அற்புதம் ) எனப்படும். நபிகள் நாயகம் (ஸல் ) அவாகளது பிரதான பொய அற்புதம் குஆன் எனும் இறை வேதமாகும்/ ஆயினும் வேறு பல அற்புதச் செயல்களும் நபி ( ஸல் ) அவாகளது வாழ்வில் நடந்ததுண்டு அவற்றில் முக்கியமானது. நபிப் பட்டம் பெற்ற 5 ம் ஆண்டு அண்ணலாரது விரலசைவுக்கு ஏற்ப சந்திரன் இரு கூறாகப் பிளந்து தனித்தனியே சென்று பிறகு ஒன்றானது.

சீதிருத்தஙகள்

மது / சுதாட்டம் / விபச்சாரம் / திருட்டு ஆகியவற்றை ஒழித்தாகள்.

பெண் சிசுக்கொலையை முற்றாகத் தடுத்து நிறுத்தினாகள்.

ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தாகள்.

பெண்களுக்கு வாழ்வுமை /மண உமை மணவிலக்கு உமை எல்லாவற்றுக்கும் மேலாக சொத்துமையையும் பெற்றுத் தந்தாகள்.
வட்டி / மோசடி/ கொலை /கொள்ளை ஆகிவற்றை தடுத்து நிறுத்தினாகள்.

இனவெறி / நிறவெறி / ஜாதிக் கொடுமைகளை நீக்கி மனித சமத்துவம் நிலைநாட்டினாகள்.

சாதனைகள்

தனது நாற்பதாவது வயதில் நபி எனப் பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து தொடாந்த 23 ஆண்டுகாலப் பிரச்சாரத்தின் காரணமாக சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்த அரபுலகத்தை ஏகத்துவ வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்து வந்தாகள் . எந்த அளவுக்கென்றால் அதன் பிறகு அம்மக்கள் நெருப்பில் விழுவதைவிடக் கொடிய விஷயமாக அதைக் கருதினா.

மூடப்பழக்க வழக்கஙகளும் மூக்கத்தனமான நடைமுறைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அம்மக்களை மென்மைப் படுத்தி / அவாகளது அறிவாற்றலை வளாத்து ஒரு சிறந்த நாகாகத்திற்கு சொந்தக்காரர்களாக மாற்றினாகள்.

சிறு சிறு குடும்பஙகளாக வாழ்ந்து வந்த அரபுக்குலஙகளை ஒரு தேசிய இனமாக உருவாக்கினாகள்.

அரபுலகின் அறியப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக அரபு தீபகற்பம் / எமன் / பஹ்ரைன் உள்ளிட்ட பெரிய பரந்து பட்ட அரசாஙகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தாகள். உலகம் முழுமைக்கும் இறைவனின் இறுதித் தூதராக இருந்து முழுமையான இஸ்லாமிய நெறியை செயல்படுத்திக்காட்டினாகள். இன்றைக்கு உலகில் வாழும் 3 ல் ஒரு பகுதியினா நேரடியாகவும் மற்றும் பலா மறைமுகமாகவும் அவரது வாக்கையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனா.

தோழாகள்

அன்னாரது தோழாகள் சஹாபாக்கள் எனப்பட்டனா. தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறியோ முஹாஜி ( அகதி ) என்றும் மதீனாவைப்பபிறப்பிடமாக கொண்ட தோழாகள் அன்சா ( உதவியாளா ) என்றும் அழைக்கப்பட்டனா.

முக்கியமான தோழாகள்

1 அபூபக்கா (ரலி)
2 உமா (ரலி)
3 உஸ்மான் (ரலி)
4 அலி (ரலி)
5 சஃதுப்னு அபீவக்காஸ் (ரலி)
6 சயீதுப்னு ஜைத் (ரலி)
7 அபூ உபைதா (ரலி)
8 சுபை (ரலி)
9 தல்ஹா (ரலி)
10 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

உயாந்தோனை நோக்கி

தனது 63 வயதில் ஹிஜ 11 ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி ( கி பி 632 ) திஙகட்கிழமை பயணமானாகள். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா ( ரலி ) அவாகளின் அறையில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டாகள். இன்னா லில்லாஹி `

*
பெருமானாரின் வாழ்க்கை குறிப்புகள்
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. பிறப்பு முதல் நபித்துவம் வரை.
2. நபித்துவம் முதல் நாடு துறத்தல் வரை.
3. மதீனா முதல் மரணம் வரை.

பகுதி ஒன்று

கி.பி 571ல் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில்-மக்கா நகரில்-ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.

(பிறை 12ல் பிறப்பு என்பதற்கு ஆதாரபூர்வமான எந்த குறிப்பும் இல்லை) அபூலஹப் பிறந்த விழா கொண்டாடினான் என்பது - அல் குர்ஆனின் 111 வது அத்தியாயத்திற்கு மாற்றமான ஆதாரமற்ற செய்தியாகும்.

குழந்தைப் பருவம்
தன் தாயார் ஆமினாவிடமும், செவிலித்தாய் ஹலிமாவிடமும் பால் குடித்து வளர்ந்துள்ளார்கள்.

4 வயதில் விளையாடும்போது ஜிப்ரயீல் வந்து நெஞ்சை பிளந்து இதயத்தைத் தூய்மைப் படுத்தினார்கள்.(இந்த செய்தி பல குர்ஆன் வசனங்களுக்கும் சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாறுபடுவதால் இதில் கருத்து வேறு பாடு உள்ளது.)

6 வயதில்
மதினாவிலுள்ள தன் கணவரின் மண்ணறையை ஜியாரத் செய்து விட்டு மக்கா திரும்பும் வழியில் அப்வா என்ற இடத்தில் தாயார் ஆமினாவின் மரணம். பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வாழ்க்கை.

8 வயதில்
பாட்டனார் மரணித்தப் பிறகு சிறிய தந்தை அபுதாலிப் அவர்களின் மேற்பார்வையில் வாழ்க்கை.

12 வயதில்
சிறிய தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபடல் (ஒருமுறை சிறிய தந்தையோடு ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்கு போகும்போது பஹீரா என்ற துறவி ஒருவர் இறுதித் தூதர் என்று முன்னறிவிப்பு செய்கிறார் இப்படிஒரு செய்தி திர்மிதி-ஹாக்கிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகிறது. ஆனாலும் இவை ஆதாரப் பூர்வமான செய்திகளல்ல.)

20 வயதில்
குறைஷ், கைஸ் கோத்திரங்களுக்கு மத்தியில் நடந்த ஹிஸ்புல் புளூல் என்ற பாதுகாப்பு ஒப்பந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 25 வயதில்

கதீஜா என்ற பெண்மணியிடம் வியாபாரியாக வேலை. அதே ஆண்டு 40 வயதான அந்தப் பெண்மணியின் விருப்பத்திற்கிணங்கி அவரை முதல் மனைவியாக ஏற்றுக் கொண்ட திருமணம்.

35 வயதில்
இறை இல்லமான கஃபா புதுப்பிக்கும் பணி. ஹஜருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் பிரச்சனையில் பெரும் சர்ச்சை எழ அதை சுமூகமாக தீர்த்து வைத்தல்.

37 வயதில்
தனிமை விருப்பம் ஏற்பட்டு ஹிரா குகையை தேர்ந்தெடுத்து அங்கு சென்று தங்குதல்.

பகுதி இரண்டு

40 வயதில்
ஜிப்ரயீலுடன் முதல் சந்திப்பு. இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள். குர்ஆன் வசனம் இறங்குகிறது. ஏகத்துவத்தை நோக்கி இரகசியஅழைப்பு.

44 வயதில்
தன் மீதும் முதல் விசுவாசிகள் மீதும் மக்காவின் எதிர்ப்பாளர்களின் துன்புறுத்தல் அதிகமாதல்.

45 வயதில்
இறைத்தூதரின் கட்டளைப்படி இரு குழுக்களின் முதல் ஹிஜ்ரத் எத்தியோப்பியாவை நோக்கிப் பயணம்.

46 வயதில்
உமர் மற்றும் ஹம்ஸா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றல்.

47 வயதில்
அபூ தாலிப் பள்ளத்தாக்கிற்கு விரட்டப்படுகிறார்கள். புகலிடம் அளித்ததற்காக பனூ ஹாஷிம் பனூ முத்தலிப் கூட்டத்தினரும் ஊர் விலக்கம் செய்யப்பட்டனர்.

50 வயதில்
50 வயதில் தனக்கு பெரும் துணையாக இருந்த சிறிய தந்தை அபுதாலிபும் அருமை மனைவி கதீஜாவும் மரணமடைகிறார்கள். நபி(ஸல்)அவர்களுக்கு அது துக்க ஆண்டாகவே இருந்தது.

51 வயதில்
வயதில் மக்காவிற்கு வெளியே தன் பிரச்சாரத்தை துவங்கி தாயிப் செல்கிறார்கள். அங்கு கடினமான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மக்காவிற்கு வெளியில் சந்தை கூடும் இடங்களுக்கு வரும் மக்களையும் ஹஜ்ஜுக்கு வரும் மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். மதீனாவில் இஸ்லாமிய சிந்தனை எட்டுகிறது. ஆயிஷாவுடன் திருமணம் நடைபெறுகிறது

52 வயதில்
மக்காவிலிருந்து விண்வெளிப் பயணம் தொழுகை கடமையாகிறது.

53 வயதில்
இரண்டாவது பைஅத்துல் அகபா நடைப் பெறுகிறது.

பகுதி மூன்று

53 வயதில்
முதல்; குழுவாக முஸ்லிம்களும் தொடர்ந்து இறைத்தூதரும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம். இஸ்லாமிய புதிய வரலாற்றுக்கான துவக்கம். அமோக வரவேற்புடன் மதினாவின் புதிய சாசனம் வரையறுக்கப்படுகிறது.

54 வயதில்
பத்ரு யுத்தம், இறை நிராகரிப்பவர்கள் 1000 பேரை முஸ்லிம்கள் 313 பேர்கள் யுத்தகளத்தில் சந்தித்து வெற்றிப் பெறுகிறார்கள்.(ஹி: 2)

55 வயதில்
உஹது யுத்தம், 3000 இறை நிராகரிப்பவர்களை 700 முஸ்லிம்கள் களத்தில் சந்திக்கிறார்கள். சில காரணங்களால் முஸ்லிம்களுக்கு நிறையஇழப்பு. (ஹி: 3)

58 வயதில்
பனு முர்ரா, கத்பான், கிஸ்ரா கோத்திரங்கள் அடங்கிய 10,000 பேர்களுடன் 3000 முஸ்லிம்கள் போர் செய்கின்றனர். இதுதான் (கந்தக்) அகழ் யுத்தம். இதில் முஸ்லிம்களுக்கு வெற்றி.(ஹி: 5)

59 வயதில்
தனது 1400 தோழர்களோடு உம்ரா செய்ய மக்கா செல்ல ஹூதைபியா என்ற இடத்தில் மக்காவின் இறை நிராகரிப்பவர்களால் தடுக்கப்பட்டு ஹூதைபியா உடன்படிக்கை நடக்கிறது.(ஹி: 6)

60 வயதில்
கைபர் போர் யூதர்களுடன். முஸ்லிம்கள் வெற்றிப் பெறுகிறார்கள். (ஹி: 7)

61 வயதில்
கத்தியின்றி.இரத்தமின்றி யுத்தம் எதுவுமின்றி முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணான மக்காவை வெற்றிக் கொள்கிறார்கள்.(ஹி: 8)

62 வயதில்
முஸ்லிம்களை ஒழிக்க 40,000 ரோமர்கள் தபூக் வருகிறார்கள், இவர்களை 30,000 முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடி பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
(ஹி: 9)

63 வயதில்
ரபிவுல் அவ்வல் பிறை 12ல் தனது இறைத்தூதர் பணியை நிறைவு செய்து மரணமடைகிறார்கள்;. (இன்னாலில்லாஹி..............................)
(இறப்பு ரபீவுல் அவ்வல் பிறை 12என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது)

வாழ்வு முழுவுதும் நான்கே வரிகளில்

இருமூன்றில்தாய் இழந்தநபி,
இருபத்தைந்தில் மணந்தநபி,
அருநாற்பதிலே நிறைந்தநபி,
அறபான் மூன்றில் மறைந்த நபி.
நன்றி :http://islamindian.blogspot.in/

No comments: