Monday, November 13, 2017

கிழக்கிலிருந்து மேற்காக

கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக
உருண்டு உருண்டு
புரண்டு  புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து
எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்


அதிகாலை வந்ததும்
எப்படித் துடித்துத் துடித்துக்
கண்களை விரிக்க முயன்றாலும்
விடாமல் உள்ளிழுத்து
விடியல் மடிகளில் புதைத்து
போர்வைக்குள் அள்ளியணைத்து
உச்ச உறக்கமாய்
தேவ தூக்கமாய்
சொர்க்க நித்திரையாய்
மலரும் அதிசயம்தான்
என்ன என்ன?

உறக்கம் என்பதும்
ஒரு மலரோ
அது
சூரியனின் வரவில்தான்
மலருமோ?


அன்புடன் புகாரி

No comments: