Friday, December 15, 2017

நானொரு முஸ்லிம் என்பதற்காகவே....

நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப்
பாராட்டுவோர்
பலர்
நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத் 
தூற்றுவோர்
சிலர்

நானொரு
புலம்பெயர் தமிழன்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை
வியப்போர்
பலர்
நானொரு
புலம்பெயர் தமிழன்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை
மறைப்போர்
சிலர்
சிலரா பலரா
நம்மையும்
நம் வாழ்வையும்
தீர்மானிப்பவர்
சிலரா பலரா
சிலரும் அல்லர்
பலரும் அல்லர்
உன்னையும்
உன் வாழ்வையும்
தீர்பானிப்பவன்
நீதான்
உன் தமிழ்ப்பற்று
உனக்குள்
எவருக்காகவும்
வந்துவிடவில்லை
உனக்காகவே
உன்னால்
உனக்குள்
வந்தது வளர்ந்தது
உன் கவிதை மோகம்
எவர் வளர்த்தும்
உனக்குள்
பற்றித் தொற்றி
வளர்ந்துவிடவில்லை
உன் மனம்
வளர்த்தே
மனதோடு மனதாக
தளைத்தது வளர்ந்தது

No comments: