Monday, December 11, 2017

இல்லறம் மெய்யறம் ....!

நல்லறமே வழிபாடாய்
---- இல்லறத்தில் வழிநடக்க
இன்பமே எந்நாளும்
---- எம்வாழ்வில் வந்திடுமே
இணைகளின் பார்வையிலே
---- தண்ணொளி வீசிடுமே
உள்ளங்கள் சேர்ந்திருக்க
---- உதடுகள் உணர்வுகளால்
இன்பமொழி பேசிடுமே

---- இன்னல்கள் இரைந்தாலும்
ஒற்றுமையின் பரஸ்பரத்தால்
---- நில்லாதே விலகிடுமே
உண்மையின் வெளிச்சத்தில்
---- உறவுகள் மேம்படவே
அரவணைத்து ஆதரிப்போம்
---- சந்தேகம் களைந்திடுவோம்
சம்சாரம் போற்றிடுவோம்
---- சமரசத்தில் இன்புறுவோம்
பேறுகள் பதினாறும்
---- சிந்தாமல் சிதறாமல்
பவ்வியமாய் வந்திடுமே
---- குற்றங்குறை இல்லாமல்
நன்மைகளை மேவிக்கொண்டு
---- மேதினியில் வாழ்ந்திருப்போமே !*

ராஜா வாவுபிள்ளை

No comments: