Thursday, January 4, 2018

பெருமான் நபிகள் நாயகம்

Athavullah Athavullah

பெருமான் நபிகள் நாயகம்
பேரிறைவன் ஆலயம்
கஅபாவுக்கு இசைவான திசை!

அவர்களைப் பிரியப் பட்ட
முஸ்லிம்களின் உள்ளங்களைத்
தங்கள் பால் இழுக்கும்
புவி ஈர்ப்பு விசை!

அனைத்தின்
தொடக்கமும் உயிர்ப்பும்
நபிகளிடம் இருந்து தான் !

நபிகளே நம்
அனைத்துக்கும் மூலாதாரம்...

அவர்களை விட்டு
நமக்கு ஏது
வேறு ஆதாரம்?

அவர்களே அனைத்தும்
என்பதற்கு
அருள்மறை வேதமே ஆதாரம்!


அவர்களின்
ஒவ்வொரு அசைவையும்
நேசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே
இது சாத்தியம்!- அதனை
மெய்ப் படுத்தும்
அருள் மறை சத்தியம்!

ஒருபோதும் நிரம்பாத
உலக ஆசைப்
பிச்சைப் பாத்திரத்தை
எங்கள் நபிப் பெருமான்
மேல் கொண்ட
இச்சைக் காதல்
மட்டுமே நிரப்பும்!

அது ஒன்றே - நமது
இம்மை மற்றும்
மறுமைத் தேவைகள்
அனைத்தையும் நிரப்பும்!

கல்லும் மண்ணும்
புல்லும் புறவும் கூடப் புரியும்
அவர்களின் மேன்மை!

இதை அறிந்தும் மறுப்போர்
மனமெலாம் கீழ்மை...

அவர்களைப் புகழ்வது என்பது
பேரிறைவனே
நமக்கிட்ட கட்டளை ..
நம்மை ஒரு முறை பாடச்சொல்லி
அவன் பத்து முறை பாடும் புகழலை....

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ..
.
Vavar F Habibullah

Muhammad (SAW) Peace be Upon his Soul
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும். إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

No comments: