Saturday, March 10, 2018

*எதற்காக இந்த ஓட்டம் ?*


*எல்லோரும் அதிவேகமாகஓடுகிறார்கள்.*

*நவீனம் நடத்தும்* *பொருளாதார பந்தயத்தில்*

*ஓடுவதற்கு தடங்கலாக* *இருந்த சொந்த ஊர்களை உதறித்* *தள்ளி விட்டு*

*வேகமாக ஓடினார்கள்..*

*பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட* *தாய்மொழி தடையாக* *இருக்கவே அதையும்* *ஒதுக்கிவைத்து ஓடினார்கள்..*

*பின்னர் தர்மசிந்தனைகள்,*

*கடமை, கண்ணியம் கூட சுமைகளாகிப் போயின..*

*எனவே அவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஓட்டத்தைத்தொடர்ந்தனர்..*




*உறவுகள் சுமையாக தொந்தரவாகஅவர்களுக்குத் தோன்றின..*

*எனவே அவற்றையும்* *விட்டுத் தள்ளினார்கள்அல்லது வில(க்)கி ஓடினார்கள்..*

*இந்த நவீன மனிதர்களுக்குப் பொருளாதார வசதி, புகழ் வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத* *வெறி மட்டுமே எஞ்சி*

*உள்ளதால்*

*பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்..*

*இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை!..*


*குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன...*

*மடிக்கணினித் திரை* *வழியாக* *பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!...*


*பிறந்த குழந்தையின்* *பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத*

*இளம் அம்மாக்களும்* *உருவாகிவிட்டார்கள்..*


*மனைவி வலியால்* *துடித்தாலும்* *அரவணைத்து மருந்து* *கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத* *

*கணவர்களும் மலிந்து* *போனார்கள்...*


*என்றாலும் எல்லோரும்* *ஒடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*


*பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது..*

*சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது*..


 மருத்துவச் செலவுக்கு அனுப்பும் பணம் கூட அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன..

*மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் முடிவதில்லை...*


*எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்களும் கேளிக்கைகளும் செல்போன்களும் விழுங்கிவிட்டன..*


*நகரங்கள் விரிவடைய*

*மனித மாண்பு வெகுவாகச் சுருங்கி விட்டது.*

*மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலைக் காப்பகங்களுக்கும்* *ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றனர்..*


*இவர்கள் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது !..*


*தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின..*

*இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள்* *தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்..*


*இனி சொல்வதற்கு ஒன்றுமில்லையே!*

*மனித இனம் நிம்மதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து* *ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது..*

*இனி அதுவே* *நினைத்தாலும்*

*நிறுத்த முடியுமா, என்ன?*

 படித்ததில் மிகவும் பிடித்தது

நன்றி adiraixpress.

No comments: