Thursday, May 31, 2018

பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அறிவிப்பால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி...!!

Saif Saif
Saif Saif
பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அறிவிப்பால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி...!!

மாலி நாட்டை சார்ந்தவன் முஹம்மது கசாமா (வயது 22).இவர் வேலை தேடி பிழைப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருந்தார்.

இன்று காலை பிரான்ஸ் வடக்கு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியின் பால்கனியின் வெளியே 4 வயது குழந்தை ஒன்று தொங்கிய நிலையில் அழுது கொண்டிருந்தது.

இளமையின் முக்கியத்துவம் / முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு...

இளமையின் முக்கியத்துவம் அது எப்படி பயன்பட வேண்டும் இப்போது எப்படி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை   நீடூர்நெய்வாசல்_ஜும்ஆ_மேடையில்  முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு...

Wednesday, May 30, 2018

நாளும்ஒருநபிமொழி காலத்தைதிட்டாதீர்கள்

நாளும்ஒருநபிமொழி /இம்மைக்காகமறுமையில் பழிதீர்த்துக்கொள்ளப்படும்

நாளும்ஒருநபிமொழி
 ********************
இம்மைக்காகமறுமையில் பழிதீர்த்துக்கொள்ளப்படும்

நாளும் ஒரு நபி மொழி / கடமைகள்

நாளும் ஒரு நபி மொழி ★* ☪ ******************************************** வழங்குபவர்: மெளலவி. MKI.முஹம்மது மன்சூர் அலி,நூரீ. ************************************ கதீபு. புதுப்பள்ளி. மேலத்தெரு

இஸ்லாமிய டிவி சேனல்கள் இணைப்பு

 Below is the link for the Islamic  TV channels you don't need to install any app or any thing just click and browse /Scroll
👉 http://www.tv.celindo.net
Daftar Channel :
1.MakkahTV
2.MadinahTV
3.RodjaTV
4.SurauTV
5.InsanTV
6.WesalTV
7.AkhyarTV
8.Niaga TV

Don't forget to share. May every one get benefited

Tuesday, May 29, 2018

Bismillah “In the name of Allah”.

நான் வலிமை கேட்டேன் .........

நான் வலிமை கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிரமங்களை கொடுத்து என்னை வலுவாக்கி அதனை சமாளிக்க வழி செய்தான்.

நான் அறிவு கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத் தீர்க்க முறை செய்தான்.

இறைவனிடம் வளமாக வாழ பொருளும் பணமும் கேட்டேன் ......... இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்.. ஆண்டவனிடம் தைரியமாக வாழ வழி கேட்டேன் ......... ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

நான் மக்களின் அன்பு கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்

இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற அவனது அருள் கேட்டேன் ... ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.

 நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை ஆனால் எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன் என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ்

வரலாற்று பெண்மணி சுவனத்தின் தலைவி அன்னை பாத்திமா ரலியல்லாஹுஅன்ஹா / ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி சொற்பொழிவு

வரலாற்று பெண்மணி சுவனத்தின் தலைவி அன்னை பாத்திமா ரலியல்லாஹுஅன்ஹா
------------
நீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு
 ===========
அன்புடன்,
S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Sunday, May 27, 2018

2:33 Iftaar in MAKKAH(From Rooftop) -15Ramadan Shihaam's View 57K views 3:11 Nagore Salim Song 01 Thirumaraiyin Mohamed Rafee Recommended for you 9:58 Hajj 2013 | Exclusive Kaba Kiswa change 2013-1434 Arafa Day HARAMAINGALLERY 9.8M views 2:45 Adhaan Maghrib and Iftar | Inside Masjid An Nabawi | Madina Al Munawwara Naat e Sarkaar Online 424K views 9:09 CNN - Sights and Sounds of the Hajj 1424-6 Adil Bradlow 178K views 2:39 Iftar in Makkah 2018: 🕋 First Day of Ramadan 1439 in front of Kaaba Masjid Al Haram Syed Mahmood 895K views 28:52 Gopinath motivational speech at RICH INDIA RICH INDIA Recommended for you Islamic University of Madinah Documentary Farooq Media Recommended for you Hajj 2017 emotional scenes Al Arabiya English Recommended for you The History of Makkah - 3D Cinematic Version MercifulServant Recommended for you Buying Dates From Medina Cheapest Dates Market, Saudi Arabia (VLOG #5) Tech2boom Recommended for you மக்காவின் வரலாறு.. The Way To Noor Recommended for you 24th Makkah Iftar Ramadan 2015 haramaininfo 49K views Masjid al-Haram | Makkah | Medina | Full HD A Zaki 1.3M views Labaik Tours Hajj group 2017 Mian S. Saeed 289K views Vijay Sethupathi talks about acting with Rajinikanth | Dinner with ‘Makkal Selvan’ – Part 1 Suryan FM Recommended for you New Iftar in front of Kaaba 🕋 Ramadan 2018 Masjid Al Haram Makkah 1439

நோன்பின் மகத்துவம் /சாஹ் மதார் பேசுகின்றார் / நீடுர் அபுஅய்மன் காணொளி


கீழான மனம்

 கீழான மனம்
பல புகழ் மொழிகளை ஏற்றதால்
(அகந்தையால்)
ஒரு பிர்ஔன் ஆக்கப்பட்டு விட்டது.

பணிவுடன் நட.
அடக்கி ஆளாதே.

உன்னால் இயன்றவரை அடிமையாக இரு.
அரசனாகாதே.

வரலாற்று பெண்மணி உம்முசுலைம் (ரலி) அன்ஹூ


வரலாற்று பெண்மணி உம்முசுலைம் (ரலி) அன்ஹூ
நீடூர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம்
ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி  சொற்பொழிவு
 ===========
அன்புடன்,
S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Saturday, May 26, 2018

நம்பிக்கையற்றோர் !

நம்பிக்கையற்றோர் !

(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 109 அல் காஃபிரூன்)

எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு - ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு

இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று - அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு

ஏகத்துவம்!

ஏகத்துவம்!

(மூலம்: அல் குர்ஆன் / சூரா 112 - இக்லாஸ்)

ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று

படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்

வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் - அவன்
ஒருவன் என்று கொள்

கழுதையும் கற்றுக்கொடுக்கும்...!


புவியின் பிரதான படைப்பினமாகிய மனிதன் தனக்கு இன்பம் வரும் வேளையில் இன்புற்று துள்ளுவதும், துன்பம் சிறிதே தொடும்போது துவண்டு உழல்வதும் இயற்கையான அனிச்சைகள்! ஆனாலும் அந்த இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல் சமமாக பாவித்து சாந்தம் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதென்பது ஒரு ஞானியின் நிலைக்கு ஒப்பாகும்!

அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை படிக்க வேண்டிய ஒரு மனிதன் அதன் அடிப்படையில் தன் வாழ்க்கையை நடத்தி அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரியவரை காணச்சென்றான்! சென்றவன் அந்த பெரியவரை நோக்கி... ஐயா உங்களைப்போலவே எனக்கும் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக கருதி அமைதியாய் வாழ ஆசை! ஆகவே அதை நீங்கள்தான் எனக்கு கற்றுத்தர வேண்டும் என்று மிக பவ்யமாய் வேண்டி நின்றான்!

ஆம்பூர் . / ஆம்பூர் பிரியாணி செய்முறை


மூச்சின் ரகசியங்கள் / Nagore Rumi on Secrets of Breathing -- 01

மூச்சின் ரகசியங்கள் பற்றிய முதல் காணொளி. க்ளோபல் ஸ்பிரிச்சுவல் கார்டன் வெளியீடு.

BLACK HOLE என்றால் என்ன?WHAT ARE BLACK HOLES?WHAT QURAN SAYS ABOUT IT?


Me'raj   (விண்ணுக்கும் வானத்திற்கும் தீர்க்கதரிசியின் உச்சக்கட்டபயணம்) ஒரு உடல் பயணம் மற்றும் இது கனவு அல்ல என்று இப்போது வானியலாளர்கள் நம்புகிறார்கள். வெளிப்படையாக கருப்பு ஓட்டைகள் ஒரு நுழைவு புள்ளி.
Astrophysicists now believe that Me'raj ( ascension of the prophet to the skies / utmost heaven ) was a physical journey and not a dream. Apparently the black holes are a entry point. Do WATCH

Friday, May 25, 2018

இறைவன் போட்ட கணக்கு


நான் கல்லூரி பயின்ற காலத்தில் நடந்த சம்பவமிது.

ஒருநாள் வழக்கமாக வகுப்பெடுக்கும் பேராசிரியர் அன்று வராத காரணத்தினால், வேறொரு பேராசிரியர் வகுப்பிற்கு வந்திருந்தார். இன்று பாடம் வேண்டாம், பொதுவாக ஏதாவது பேசுவோம் என்று சொல்லி, (அந்நிகழ்வு பி.காம் வகுப்பின் கடைசி வருடமாக இருந்ததால்) ஒவ்வொரு மாணாக்கர்களையும், பட்டப்படிப்பு முடித்து விட்டு மேற்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்க ஆரம்பித்தார். எனது நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கனவை ஆர்வமாய் சொல்ல துவங்கினர்.

நான் இரண்டாம் வரிசையில் மூன்றாவது நபராய் என் நண்பன் கலியமூர்த்தி அருகில் அமர்ந்திருந்தேன். என் நண்பர்கள் ஒவ்வொருவராய் சொல்ல ஆரம்பிக்க, நான் மெதுவாய், பி.காம். முடித்து விட்டு சி.ஏ.படித்து ஆடிட்டராய் ஆவது என் விருப்பம் என சொல்ல மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் கலியமூர்த்தி எழுந்து அவன் சொல்லி முடித்த அடுத்த நிமிடம், நான் எழுந்து என் தந்தை நடத்தி கொண்டிருக்கும் எங்கள் டிராவல்ஸ் நிறுவத்தை நான் ஏற்று நடத்த போகிறேன் என்று நான் சொன்னவுடன், வாழ்த்துகள் என்று கூறிவிட்டு, அடுத்த மாணவர் சொல்வதை என் பேராசிரியர் செவிமெடுக்க ஆரம்பித்து விட்டார்.

Thursday, May 24, 2018

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

சேவையின் மாண்பு

நீடூர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி  சொற்பொழிவு
 S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Tuesday, May 22, 2018

உலகங்கள் எல்லாம் உருவாக்கி காத்து

தீனிசைத் தென்றல்,  தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய   தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும்
பாடலை எழுதிய கவிஞர்களுக்கும்,மிக்க நன்றி.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Terizhandur Tajudeen sings) தேரிழந்தூர் தாஜுதீன்

தீனிசைத் தென்றல்,  தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய   தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும்
பாடலை எழுதிய கவிஞர்களுக்கும்,மிக்க நன்றி.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Monday, May 21, 2018

தாயிற் சிறந்தவனே ...!

ஆதியும்நீ அந்தமும்நீ
அன்றாடம் செலுத்துகிற
நீதியும்நீ நிரந்தரன்நீ
நிர்மலனும் நீயேதான்!

பாதியிலுன் அடியாரைப்
பரிதவிக்க விட்டறியா
சோதிமணி யும்நீயே
சொல்லஒண்ணாப் பேரருள்நீ!

மேதைமைநீ மேலோன்நீ
மிக்கபெரும் வல்லவன்நீ
பேதைமையால் வழிதவறாப்
பேருதவி செய்பவன்நீ!

எதுக்கு காலில் விழணும்! Pa.Ranjith

எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் அனுபவ பாடம்...! சிகரெட் பிடிப்பதை விடுங்கள்...


இந்த சிகரெட் தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

Sunday, May 20, 2018

ஆன்மீகம் என்பது பெரும் கடல்..

#உங்களைத் தலைமை தாங்க அவர்கள்
தகுதியானவர்கள் இல்லை# ..!
++++++++++++×××××××××××
தவ்ஹீத் ஜமாத்தில் இருக்கும் (எனக்கு தெரிந்த)
நண்பர்கள் பலர்..
தொழுகையை விட மாட்டார்கள்,
நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள்,
பொய் சொல்ல மாட்டார்கள்,
பணமோசடி செய்ய மாட்டார்கள்,
நோன்பை விட மாட்டார்கள்..
ஹராமான காரியத்தை செய்ய
அல்லாஹ் வை அஞ்சுவார்கள்..!
அதன் தலைமை பொறுப்பில்
இருப்பவர்களைப் பற்றி எனக்கு தெரியாது.
காரணம் நான் அதன் உறுப்பினராக
இருந்தது இல்லை.!

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (6)


----- மர்யம் சித்திகா

***இல்லை ***

எல்லாம் சரியாகவே நடக்கின்றது..!
கேட்டதெல்லாம் கிடைக்கின்றது..!
எதிர்பார்ப்பது போலவே -
எல்லாம் அமைகின்றது..!

எல்லாம் மிகச் சரியாகவே
நடக்கின்றது..!

முட்டாள் வாழ்க்கை..!

கற்பதற்கும்..!
கற்பிப்பதற்கும்..!
இடமில்லை இங்கு..!

----------------------------------------------

***சாயல்***

போகும் வழியெங்கும் கண்ட,
நெட்டையான, குட்டையான,
கருத்த, வெளுத்த,
தடித்த, மெலிந்த - அத்தனை
மனிதரிலும்..
அந்த
ஆதிமனிதன்..
ஆதமின் சாயல்..!

தனது,
உயிர்த் தோழனுக்காக
கண்கலங்கிய - அந்த
உண்மை மனிதனின்,
கண்ணீரிலும்..
அதே,
கள்ளங்கபடமற்ற,
ஆதிமனிதனின்
சாயல்..!

Hilal Musthafa

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (5)

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (5)


---மர்யம் சித்திகா

ஒதுக்கியவர்கள்...
ஒதுக்கப்பட்டவர்கள்..!

அலுவலகம் செல்ல வேண்டி ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்தேன்.
அந்தப் பாதையிலொருவர் தனது காலைக் கடனை
முடித்துக் கொண்டு இருந்தார்.

இயற்கை அழைப்பின் பேரில் கழிவுகளை கழிக்க வேண்டி
பொது இடங்களில் ஒதுங்கும் மனிதர்களை நாம் வழி நெடுக
ஆண், பெண் பேதமின்றி பார்க்கலாம்.

பார்த்தவுடன் ஒரு முகச் சுழிப்புடன் கூடிய முகத் திருப்பல்...

என்ன வெட்கம் கெட்ட மனிதர்கள் இவர்கள்..?

பொது இடங்களில் அசிங்கம் செய்து கொண்டு..!!

நாகரீகம் அற்ற, வெட்கம் கெட்டவர்கள்.
போதாக்குறைக்கு அந்த அசிங்கங்களைத்
தாண்டி வேறு செல்ல வேண்டும்.

நாம் தினமும் இவ்வாறாக
முகத்தை சுழித்தும், முகத்தை திருப்பியும்,
மூக்கை மூடியும், தாண்டியும் சென்று விடுவோம்.

நாம் நாகரீகமான, வெட்கம் கெடாத மனிதர்கள்...

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்...! (4)


---- மர்யம் சித்திகா

மகரந்தச் சிதறல்கள் ...!

*** தான் ***

சுதந்திரம்..!
எனக்கு,
என்மீதான
உரிமை..!

***தொடர் ***

புயலால்
பல ஆயிரம்
மரங்கள்
சாய்ந்தன..!
எத்தனை
நட்சத்திரங்களின்
கண்கள்
அவிழ்ந்தனவோ...!

***எதிர்***

வாழ்க்கை
ஒரு நாளும்
நம்மை
பயமுறுத்துவதில்லை..!
ஆனால்,
நாம்
மிகவும்
பயங்கரமானவர்களாக
மாறிக்கொண்டு இருக்கிறோம்..!

***குமட்டல் ***

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள் ..! (3)

----மரியம் சித்திக்கா.

சுலைமான் எறும்பு...!

மாலை,
அலுவலகம் விட்டு
கிளம்பும் முன்
அலுவலகச் சாளரம்
வழியே
காணும் ஒரு
தினசரிக் காட்சி..!

நான்கு, ஐந்து கிளிகள் கொண்ட
ஒரு கிளி கூட்டம்..!

கிழக்கிலிருந்து மேற்காக,
விருட்டென்று பெரிய சத்தத்துடன்
பறந்து செல்லும்..!

மிகச் சில நொடி இடைவெளியில்மீண்டும்,
மேற்கிலிருந்து கிழக்காக
அதே 'விருட்',
அதே சத்தத்துடன்
பறந்து திரும்பும்.

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...


``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

Thursday, May 17, 2018

Music Director Taj Noor / இசை இயக்குனர் தாஜ் நூர்

Taj Noor 
இவரது முகநூல் பக்கம் பார்க்க Taj Noor 

#கல்லறையே ... கருவறையாக ...

Abu Haashima

பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது
மீண்டும் குண்டுமழை பொழிந்து
ஏராளமானவர்களை கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல் !
இதற்கு முன்னரும் இப்படி பல படுகொலைகளை செய்தது .
2006 ல் நடந்த ஒரு கொலை வெறி தாக்குதலை பற்றி
#கவிமாமணி_பேராசிரியர்
#தி_மு_அப்துல்காதர் அவர்கள்
#நமது_முற்றம் இதழல் எழுதிய கவிதை !

#கல்லறையே ...
#கருவறையாக ...

அன்று -
வெட்டுப்பட்ட பிளவுகளில்
ஒட்டும் கோந்து
ஊறும் மரம் போல
கலீல் ஜிப்ரானின்
கனிந்த நாவில்
கிழிபடும்
உலகப்படத்தை
ஒன்றாய் ஒட்டும்
உயிர்ப்பசைக் கவிதைகள்
உலவிய லெபனான்
இன்று
கிழிந்து கொண்டிருக்கிறது !

தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹிய்யாத் விரல்கள் !

Harvard Tamil Chair Interview

Monday, May 14, 2018

இன்பம் நிறைந்த வாழ்விது ...../ Haja Maideen



அப்துல்லாஹ் ஆமீனாவின்

என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது...../ Haja Maideen என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது வரிகளால், வார்த்தைகளால் மட்டுமல்லாமல், கவிதையாய், பாடலாய் வடிப்பதும் என் இளமை காலம் தொட்டு வந்த வழக்கம். அதில் ஒன்று இன்றும்..... கேட்டு மகிழ்ந்து கருத்து கூறுங்கள்.! நன்றி. Haja Maideen அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்புடன் S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Sunday, May 13, 2018

பூ மழைபோல் வருகின்றது நோன்பு

அருள் பொங்கும் ரமலான்

இனிமையான ரமலான்

நீடூர் நெய்வாசல் பெரியபள்ளிவாசல் துணை இமாம் சாஹ்மதார் மிஸ்பாகி அவர்கள் பேசுகின்றார்

நீடூர் நெய்வாசல் பெரியபள்ளிவாசல் துணை இமாம் சாஹ்மதார் மிஸ்பாகி அவர்கள் பேசுகின்றார்
அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்


https://soundcloud.com/user240683246/aud-20180412-wa0001

பழங்குடிகள் - நவீன அகதிகள் - எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் MUTHU KRISHNAN·

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
First we were dispossessed in the name of kings and emperors, later in the name of state development, and now in the name of conservation.
 - Indigenous delegates to the Fifth World Parks Congress, Durban, South Africa, 2003

சுனாமியைக் கண்டு இந்த மொத்த உலகமும் தன் தொழில்நுட்பங்களுடன் கதிகலங்கி நின்றது. அதே சமயம் அந்தமானின் ஜார்வா பழங்குடிகள் நம்மை எல்லாம் எள்ளி நகையாடினார்கள். அவர்கள் சுனாமி வருவதை முன்கூட்டியே உணர்ந்து மேடான பகுதிகளுக்குச் சென்று விட்டார்கள். இயற்கையுடன் இயைந்து வாழ்பவர்களுக்கு இயற்கையின் எல்லா சமிக்ஞைகளுமே உணர்வு அளவிலேயே பொதிந்துள்ளது. பழங்குடிகள் இயற்கையின் மடியில் வளரும் அதன் செல்லக் குழந்தைகள்.
பழங்குடிகள் என்போர் யார் என்று கொஞ்சம் அகராதிகளில் தேடினால் பலவித விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. 

அ. முத்து கிருஷ்ணன் சங்கபலகை

ஞாநி - தீம்தரிகிட | அ. முத்து கிருஷ்ணன்

(பாலஸ்தீனப் பயணத்திலிருந்து நாடு திரும்பிய அ. முத்துகிருஷ்ணனுடன் இணையத்தின் வழி நடத்தப்பட்ட நேர்காணல்)

 
 
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"
அ. முத்துகிருஷ்ணன்


(பாலஸ்தீனப் பயணத்திலிருந்து நாடு திரும்பிய அ. முத்துகிருஷ்ணனுடன் இணையத்தின் வழி நடத்தப்பட்ட நேர்காணல்)

எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச்சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர். தன் எழுத்துக்களுக்காகத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாகப் பயணித்தும் வருபவர்.

இந்தியாவின் குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரம் என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்தில் இருப்பவர். மிக அபூர்வமான பல தகவல்களைப் பார்வைகளைத் தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தொடர்ந்து உயிர்மை, தலித் முரசு என பல இதழ்களில் எழுதியும் வருபவர், தன் எழுத்தின் ஒரு பகுதியாக முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலாடாதே, தோழர்களுடன் ஒரு பயணம் இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரை தொகுதிகள்.

அ.முத்துகிருஷ்ணன் டிசம்பரில் (2010) பாலஸ்தீன ஆதரவுக்குழு ஒன்றுடன் இணைந்து தரைவழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், ஏகிப்து வழியேக பாலஸ்தீனம்வரைச் சென்று மகத்தான ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கிறார். இந்தியா, வங்கதேசம், மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பாலஸ்தீன ஆதரவாளர்களான அறிவுஜீவிகள் நடத்திய பயணம் இது. மக்களோடு நெருக்கமாகப் பயணிக்கக்கூடிய இயல்பான மனமும் செயல்பாடுகளும் கொண்ட முக்கியமான எழுத்தாளர் இவர். அரசியலில் கூர்மையான அவதானிப்பும் அதனைச் சார்ந்து விவாதிக்கக்கூடிய உரையாடக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் தன் பயணங்களின் மூலமும் எழுத்தின் மூலம் உருவாக்கி வருகிறார். 'வல்லினம்' இதழுக்காக அவருடன் இணையத்தின் வழி ஒரு நேர்காணல் செய்யப்பட்டது.

கவனம்.! குழந்தைகள் பாதுகாப்பில் தேவை கவனம்.!!!

முன்பொரு காலத்தில் நம் வீட்டுக் குழந்தைகளை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டு தெருக்குழந்தைகளுடன் விளையாட விட்டு நிம்மதியாக பயமின்றி  நமது மற்ற   வேலைகளில் கவனம் செலுத்தி வந்தோம். குழந்தைகளும் ஆசைதீர சுதந்திரமாக  இஷ்டம்போல் விளையாடிக் களைத்து வியர்த்து சந்தோசமாக பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்.


அது கள்ளம் கபடமற்ற வெள்ளைமனம் கொண்ட காலமாக இருந்தது.  விஞ்ஞானமும் நவீனமும் அத்தனை வளர்ச்சி பெறாமல் இருந்தது.ஆகவே மேற்கொண்டு அறிந்துகொள்ள வழிதெரியாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் எந்தஒரு விஷயத்தையும் அறிந்து  வைத்திருக்க முடிந்தது . ஆகவே  ஒருவித பய உணர்வு குழந்தைகளுக்கு இருந்தது.

Saturday, May 12, 2018

நாகரீகமாய் பதிவிடுவோம் ....

நட்புகள் யார் மனசையும் புண்படுத்தும் பதிவல்ல பண்படுத்தும் பதிவு ....

நமது சிந்தனைகள் எண்ணங்கள் நாமறிகிற செய்திகள் அரசியல் அலசல்கள் நாட்டு நடப்புகள் விழா நிகழ்வுகள் விளையாட்டுத் தகவல்கள் மார்க்க விஷயங்கள் இவைகளை போன்று இன்னும் விரிகிற பலவற்றையும் பதிவிடும் களமாக முகநூல் அமைந்தாலும் சில தருணங்களில் போராட்ட தளமாக மாறி தாறுமாறாக பயணிக்கிறது என்பதையும் நாம் மறுக்க இயலாது ....

Friday, May 11, 2018

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..! (2)

 மரியம் சித்திக்கா

படைப்பாளனின் பதிவேடு..!

இதுவரை இல்லாத ஒரு புது தைரியம்
கடந்த 4 ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது.

செலவு செய்யும் தைரியம்..!

சம்பாதிக்க ஆரம்பித்ததும் செலவு செய்யும் தைரியமும்
கூடவே சேர்ந்து bonus-ஆக வந்து விட்டது.

அடிக்கடி ஆட்டோவில்தான் காலைப் பயணம் அலுவலகத்திற்கு.

அப்படி ஒரு நாள்,
எதை பார்க்கின்றேன், என்ன யோசிக்கிறேன் என்ற உணர்வு இல்லாமல்
சென்று கொண்டு இருந்தேன்.

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?
ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?
கடலையும் வானத்தையும் விட
வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...

" தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம்" என இறைவன் சொன்னதாக
நபிகள் ( ஸல் ) சொன்னார்கள் .
உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"

MBBS முடித்து, மருத்துவராகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மகளுக்கு எழுதியக் குறிப்பு.

தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நடக்கும் கலேபரங்கள்
பீதியைக் கிளப்ப, அல்லாஹ் நாடியபடி இன்று MBBS முடித்து, மருத்துவராகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மகளுக்கு எழுதியக் குறிப்பு.

முகநூல் சொந்தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

Daughter became Doctor!

Shahnaz,

You perhaps
moving towards your dream
missing out to note
that it was my dream too !

I never meant to
push my dreams
into you
but
found it there
already in you;
thus
I just had to induce it !

Thursday, May 10, 2018

ட்விங்கிள் ட்விீங்கிள் லிட்டில் ஸ்டார்.

இன்று வாசித்த மாநாட்டுக் கவிதை.
========+=======+======+======
ட்விங்கிள் ட்விீங்கிள் லிட்டில் ஸ்டார்.
========+========+======+======
தனம்-
ஒடுக்கப்பட்ட இனம் என்ற
ஒற்றைப் பிழைதான்
வேறு
தவறெதுவும் செய்யவில்லை
இந்தத் தளிர்.

கப்பு தண்ணீருக்காக
"கட்டிநாயக்கன்பட்டி"
அந்த
செப்புத் தேரை
சிதைத்துப் போட்டது.

தாய் என்னும் நினைவு

தாயின் தினம்
புனிதத் தினம்....!

தக்கலை ஹலீமா இன்று முகநூலில், தாயர் தினத்திற்காகப் பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவின் பாதிப்பால் நானும் தாயர் தினத்தை நினைவுகூர்கிறேன்.

தாய் என்னும் நினைவு நம் உணர்வில் எழும்போதே அத்தாய் நம்மைத் தாங்கிய வயிறுதான் முதல் நினைவாகிறது.

தாயின் கர்ப்பை நிகழ்த்தும்
ரசாயன மாற்றங்களும் ரசவாதப்
பரிமாணங்களும் பிரமிக்க வைக்கின்றன.

Wednesday, May 9, 2018

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 5 )


*
சிந்தனை சிறப்புகள் சேர்க்கும்
செயல்கள் செம்மை கொணரும்
நிபந்தனை நிர்பந்தம் நிர்வகிக்கும்
நிந்தனை நிர்மூலம் ஆக்கும்
*
பசியை ஆற்று
பாவத்தை நீக்கு !
பண்பை பற்று
புண்ணியம் ஆகும் !!
*

Tuesday, May 8, 2018

குழந்தைக்கான கல்வி முறை குறித்து மொழிப்பிரியன் || கொடைக்கானல் KODAI FM

கல்வியா செல்வமா வீரமா!! / KNOWLEDGE SKILL AND TALENT - dr.habibullah


கிரேக்கத்தின் சாக்ரடீஸ்
பிளாட்டோ,அரிஸ்டாடில்
தொட்டு தமிழ்நாட்டின்
அண்ணா வரை
கல்வியே
தங்கள் வெற்றி என்றனர்.

அமெரிக்காவின்
ரோத்சைல்ட்,ராக்பெல்லர்
பில்கேட்ஸ் தொட்டு நமதூர்
அம்பானி,அதானி வரை
செல்வமே
தங்கள் வெற்றி என்றனர்.

ஏர்போர்ட் சாலையென்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்

Abu Haashima

இது திருவனந்தபுரம் ஏர்போர்ட்
சாலையென்று நினைத்தால்
நீங்கள் ஏமாந்து போவீர்கள்.

இது நாகர்கோயில் பக்கமுள்ள
வடிவீஸ்வரம் கிராமம்.
நகரத்தின் முக்கிய சாலைகளிலோ
அல்லது நகரத்தின்
வேறு எந்த பகுதிகளிலோ
அமைக்கப்படாத
ஒளியுமிழும் கற்கள்
சாலையின் இருபுறமும் அமைப்கப்பட்டு
அழகான ரன்வேயைப்போல காட்சியளிக்கின்றன வடிவீஸ்வரம் கிராமத்தின் சாலைகளும் தெருக்களும்.
நகரத்தின் மற்ற தெருக்கள் ...
குறிப்பாக
முஸ்லிம்கள் வாழும் தெருக்களும்
குடியிருப்புப் பகுதிகளும்
வாகனங்கள் ஓட்டிச் செல்வதற்கே
தகுதியற்ற சாலைகளாகி பல வருடங்களாகி விட்டன.
ஆளும் கட்சியும் சரி
திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் சரி
முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்
குண்டுகுழிகளாக இருப்பதையோ
குப்பை மேடுகளாக மாறுவதையோ
கண்டு கொள்வதே இல்லை.

எல்லா கட்சி பிரமுகர்களுக்கும்
பாய்கள் கொடுக்கும் பிரியானிதான் முக்கியம்.
அவர்களின் குடியிருப்புப் பகுதி சுகாதாரம்
முக்கிமில்லை.

சரி ...
வடிவீஸ்வரம் கிராமத்துத் தெருக்கள்
ஏர்போர்ட் ரன்வேபோல் ஒளி உமிழ
என்ன காரணம் ?

பரோட்டாவின் கதை :

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சினையே தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது..

Sunday, May 6, 2018

ஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்...! (1)

அந்நியம்...!

வேளச்சேரி 100 அடி ரோடு !
மரங்களே இல்லாத
கட்டிடங்கள் நிறைந்த, புழுதி படிந்த
கான்கிரீட் சாலை..!

அச்சூழலுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத,
நீல நிற உடலும் மரப்பட்டை நிற
தலையும் அலகும் கொண்ட
ஒரு பறவை..!

அங்கும், இங்கும் பறந்து
பேந்த, பேந்த விழித்துக்
கொண்டிருந்தது..!

என் படித்தல் கதை....!


என் ஆரம்பப் பாடசாலையில் எனக்கு
வாசிப்பே கிடையாது.

எட்டாவது படிக்கும் மட்டும் படிப்பே இல்லை. எப்படி எட்டுவரை.
அது
ரகசியமற்ற ரகசியம்.

என் அண்ணன்
என் வாப்பாவிடம் மாட்டிவிட்டு விட்டான்.
அவருக்கு அன்றுதான் தெரியும் என்கதை.
எனக்குத் தமிழே வாசிக்கத் தெரியாது.
எழுத்துத் தெரியும் வார்த்தைகளைப் படிக்கத்தான் தெரியாது.

கண்ணாடி முன் நின்று தலைமுடியை கவனமாக ஆராயும் அநேகரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்

 ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று தலைமுடியை கவனமாக ஆராயும் அநேகரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள்; சில சமயங்களில் அதுவே கவலையாகவும் வேதனையாகவும் ஆகிவிடுகிறது.  ஏனென்றால் சாதாரணமாக தினமும் 50 முதல் 100 முடிகள் உதிரும் இதில் சிலருக்கு கொத்து கொத்தாக முடி கொட்டுவது தான் பிரச்சினை. காரணம் என்னவென்று தெரியாமல் பல பல மருத்துவம், பலவிதமான எண்ணெய் களை தேய்ப்பது, விளம்பரத்தில் வரக்கூடிய ஷாம்பூ களை வாங்கி தலையில் தேய்த்து குளிப்பது....
முடிவு மேலும் அதிகமாக முடி கொட்டுவது தலை வழுக்கையாக ஆகுவதே மிச்சம்.

ஓரிதழ்ப்பூவை ஒரு பெண் எழுதியிருந்தால்?

Jazeela Banu | நூல் விமர்சனம் ,


நூலாசிரியர் அய்யனார் விஸ்வநாத் தெரிந்தவர், நெருக்கமானவர் என்பதற்காகவும், வெளிப்படையான கருத்துக்களை ஏற்க கூடியவர் என்பதாலும், அதுவும் சமீப காலமாக வீரியம் குறைந்து, கோபதாபங்கள் குறைந்து விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டதாலும், இது அவரைப் பற்றிய விமர்சனமல்ல அவர் படைப்பை பற்றியது என்பதால் மிகத் தைரியமாக ஒரு பெண்ணின் பார்வையில், ஒரு தாயின் பார்வையில் இப்புத்தகத்தை அணுக முயற்சித்துள்ளேன்.

Saturday, May 5, 2018

குழந்தை இலக்கியம்: 'மறுமையின் மணிவிளக்கே!'

"பாறையினும் வலிய
நிலைகுலையாத ஈமானில்
உறுதியாய் நில்
எனதருமை மகனே!"

இனி கொஞ்சம் தூரம்தான்..
வெற்றி என்னும் வானம்
இதோ.. தலைக்கு மேல்
தொட்டுவிடும் தூரம்தான்!
பற்றிய என் கரத்தை
விடாதே என் மகனே!

mohamedali jinnah 573 subscribers

mohamedali jinnah 573 subscribers
mohamedali jinnah  05-2007
Creator since
Graph Here’s how your channel did this month
+16
Uploads
+17,633
Minutes watched
+43
Subscribers

View And here are your community numbers
+1
Comments
+49
Likes
+134
Shares

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் மௌலானா_ மௌலவி, அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் மௌலானா_ மௌலவி, அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள்
ரப்பே ! இவரை   சுவர்க்கத்துக்கு சொந்தக்காரராகக ஆக்கிவிடு !

ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த S.முஹம்மது சலீம் Mohamed Saleem\. அவர்களின் தகப்பனாரும் பல_உலமா_பெருமக்களை இம்மண்ணிற்கு உருவாக்கித்தந்த #நீடுர் அரபுக்கல்லூரி முன்னால் #பேராசிரியருமான மௌலானா_ மௌலவி, #அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை May 5 மாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை வருத்ததுடன் தெருவித்து கொள்கிறோம்,
இன்று சனிக்கிழமை May 6 லுகர் தொழுகைக்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது
அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக! அவரைப்பிறிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை வழங்குவானாக!!\


படம்
அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் மற்றும் அவரது மகனார் S.முஹம்மது சலீம் (இன்று அதிகாலை துபாயிலிருந்து வந்து சேர்ந்தார் )
S.முஹம்மது சலீம் (இன்று May 6 அதிகாலை துபாயிலிருந்து வந்து சேர்ந்தார் )

அல்ஹாஜ்:S. #சுலைமான்_பாட்சா ஹஜ்ரத் மற்றும் நான்(முகம்மது அலி

DR.HABIBULLAH / DR.ஹபீபுல்லா

DR.HABIBULLAH
Senior Consultant Paediatrician 
and
Adolescent Psychologist

available for consultation
between 9AM to 1PM only 
at 
Gerdi Gutperle
Agasthiyar Muni 
Children Hospital
Vellamadam - K.K.Dist.

Consultation Strictly 
by
APPOINTMENT ONLY

*நாட்டு மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?*

*நாட்டு மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

Thursday, May 3, 2018

இளைய தலைமுறை


by, DR HABIBULLAH


நல்லசிவன் தினேஷ்
17 வயது பிளஸ் டூ மாணவன்.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்
எனப்படும் நெல்லையின் மைந்தன்.
இளம் வயதில் தாயை இழந்தவன்
குடிகார தந்தையின் வன்முறை
அடி உதைகளுக்கு பயந்து,
வீட்டை துறந்து, மாமா மணியின்
நிழலில் சில காலம் வாழ்ந்து,
பின்னர் பிளஸ் டூ பாஸாகி,
நீட் தேர்வை எதிர் கொள்ள
தயாராகி வந்தவன்,
தேர்வு செலவுகளுக்காக..

சென்னையில், ஒரு சிறு
டீக்கடையில் பகுதி நேர
வேலை பார்த்து, சிறுக சிறுக
சேகரித்த பணத்தை எடுத்து
கொண்டு, பெற்ற தந்தையை
காண பாசத்துடன் வந்த மகன்,
நீட் தேர்வு எழுதி மருத்துவனாக
வேண்டும் என்ற உன்னத நோக்கம்,
அதை பெற்றெடுத்த
தந்தையுடன் பகிரும் ஆர்வம்!

Wednesday, May 2, 2018

மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை

மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும்
வரை அவனுக்கு
எந்த துணையும் தேவையில்லை..

அவனை சுற்றி எல்லோருமே இருப்பார்கள்..

படுத்து விட்டால் பார்த்து
கொள்ள யாரும் கிடையாது.இது
உலக வழக்கம்..

கணினி உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களில்
ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

காணொளிகள்


என்னங்க … ?

கணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும்.

பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத்தால், “பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம்.
வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம்.
கல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் “என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க, சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.

கற்றல் வனப்பு

 by கௌசி 
குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும். இக்கல்வி தமது பிள்ளைகளுக்கு வாய்க்கப் பெறுவதற்குப் பெற்றோர் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கற்பதற்கான வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள்.

Tuesday, May 1, 2018

Surat Al-'Ikhlāş (The Sincerity) - سورة الإخلاص / அனைவருக்கும் மிக அழகான பிரார்த்தனை

Surat Al-'Ikhlāş (The Sincerity) - سورة الإخلاص

بسم الله الرحمن الرحيم

Say, "He is Allah , [who is] One,

Say (O Muhammad (Peace be upon him)): "He is Allah, (the) One.

Say: He is Allah, the One and Only;
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
Allah , the Eternal Refuge.
"Allah-us-Samad (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks).
Allah, the Eternal, Absolute;
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
He neither begets nor is born,
"He begets not, nor was He begotten;
He begetteth not, nor is He begotten;
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
Nor is there to Him any equivalent."

"And there is none co-equal or comparable unto Him."

And there is none like unto Him.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

THERE IS NO GOD BUT ALLAH
Allah, the Eternal, Absolute;
He begetteth not, nor is He begotten;
And there is none like unto Him.

Allah's Messenger (peace be upon him) said to Mu'adh: The key to Paradise is the testimony to the fact that there is no god but Allah.
"லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" வணங்குவதற்குத் தகுதியுடையவன் அல்லாஹ்வைத் தவிர வேரு யாரும் எதுவும் இல்லை

காயிதே மில்லத்தின் கதை | Quaid-e-Millat Story | News7 Tamil

இசை முரசு : நாகூர் அனீபாவின் கதை | The Life History of Nagoor Hanifa | News7 Tamil

மயிலாடுதுறை மணிக்கூண்டு

தெரிந்துக்கொள்வோம் !

 மயிலாடுதுறை மணிக்கூண்டு

மயிலாடுதுறை கடை வீதியில் நடு மையமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் ஜனாப் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.


1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று "நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் துனிசியா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.